Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027

Posted DateJuly 16, 2024

துலா ராசி சனி பெயர்ச்சி 2025 பொதுப்பலன்

துலாம் ராசி அன்பர்களே!  மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 6ம் வீட்டில் நடக்கும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.

இது ஒரு சாதகமான பெயர்ச்சியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. பொதுவாக, சனி கிரகம் உங்கள்  ராசியிலிருந்து 3, 6 அல்லது 11 வது வீட்டில் சஞ்சரிக்கும் போது சாதகமானதாகக் கருதப்படுகிறது. 6 ஆம் வீடு சவால்கள் மற்றும் தடைகளுடன் தொடர்புடையது, மேலும் இந்த வீட்டில் சனியின் சஞ்சாரம் எதிரிகளின் மீதான வெற்றி உட்பட இந்த சவால்களை சமாளிப்பதில் வெற்றியைக் குறிக்கும். சனி மெதுவாக முடிவுகளைக் கொண்டுவரும் அதே வேளையில், அது அதன் நேர்மை மற்றும் நீதிக்காக அறியப்படுகிறது.

உத்தியோகம் :-

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த காலக்கட்டத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் உத்தியோகத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும். உங்கள் உத்தியோகத்தில் அதிக உயரங்களை அடைய, உங்கள் பலம் மற்றும் திறன்களின் அடிப்படையில், உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் பொறுப்புகளுடன் அணுக நினைவில் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள் இந்த காலக்கட்டத்தில் நல்ல உற்பத்தியைக் காண முடியும். தொழிலை மேம்படுத்துவது அல்லது விரிவாக்கம் நடக்கும். நீங்கள் தொழிலில் புதிய உத்திகளைக் கையாளலாம். அதே சமயத்தில் நீங்கள் சில சவால்களையும் சந்திக்க நேரலாம். எனவே கவனமும் எச்சரிக்கையும் தேவை. தொழிலில் போட்டியாளர்கள் அல்லது எதிரிகள் வலுவாக இருக்கலாம். என்றாலும் நீங்கள் அவர்களை வெற்றி கொள்ளலாம்.

காதல் / குடும்ப உறவு : 

கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் நீங்கள் கற்ற படிப்பினைகளும் உங்கள் எதிர்காலத்தை செப்பனிட இப்பொழுது உதவலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அதிக வரவேற்பை அளிக்கலாம். இது உறவில் சிறந்த புரிந்துணர்வை வளர்க்கும். உறவில் வதந்திகள் மற்றும் எதிர்மறைகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம், விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் உறவில் பிணைப்பு வலுப்படும். உறவில் ஒளிவு மறைவு அற்ற தன்மை உறவை வலுவாக்கும். இது ஆழமான இணைப்புகளுக்கான வாய்ப்புகளை கொண்டு வரக்கூடும், இருப்பினும் யதார்த்தமான எதிர்பார்ப்புகளுடன் அணுகுவது முக்கியம். உங்கள் உறவின் நிலையைப் பொருட்படுத்தாமல், பெரியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவைப் பெறுவது நன்மை பயக்கும்.

திருமண வாழ்க்கை :-

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும். வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் கவனிப்பு மற்றும் பிணைப்பை நீங்கள் காணலாம். கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகள் காரணமாக நீங்கள் ஒன்றாக நேரம் செலவிட முடியாமல் போகலாம். இது உங்கள் உறவை சிறிய அளவில் பாதிக்கலாம்.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உத்தியோகம் என  இரு பகுதிகளும் போதுமான கவனத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த, உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.

நிதிநிலை:-

பண விஷயங்களில் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். தேவையான செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். ஆடம்பர பொருட்கள் மீது உங்களுக்கு ஆசைகள் வரலாம். என்றாலும் அதனை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க கவனமாக திட்டமிடல் மற்றும் பட்ஜெட் ஆகியவை அவசியம். அதிகப்படியான செலவுகள் கடனுக்கு வழிவகுக்கும், எனவே ஒவ்வொரு பொருளை வாங்குவதற்கும்   முன் அதன் தேவை மற்றும்  அவசியத்தை கருத்தில் கொள்ள நேரம் ஒதுக்குவது முக்கியமானது. நீங்கள் தொழில் விரிவாக்கத்திற்காக பணத்தை செலவிட நினைக்கலாம். என்றாலும் அது நீங்கள் நினைப்பதை விட அதிக செலவுகளை வைக்கலாம். அதற்கு தொழில் விதிமுறைகள் காரணமாக இருக்கலாம். எனவே, விதிமுறைகள் சாதகமாக இருக்கும்போது மட்டுமே முதலீடு செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் தான் உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மாணவர்கள் :-

இந்தக் காலகட்டம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும். முன்னேற்றங்களுக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. மாணவர்கள் திட்டமிட்டு கல்வி பயில்வார்கள். அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களின் முயற்சிகள், கவனமாக திட்டமிடல் மற்றும் உறுதியுடன் இணைந்து, அவர்களின் அபிலாஷைகளை அடையலாம். மாணவர்கள்  படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். புதுமையான சிந்தனைகள் அவர்கள் மனதில் எழலாம். திறன்களை வெளிப்படுத்தலாம். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு  இந்த காலகட்டம்  ஏதுவானதாக இருக்கும். இருப்பினும், வெற்றிக்கு தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது  அவசியம், நீட் மற்றும் பிற போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள் வெற்றி பெறலாம்.

ஆரோக்கியம் :- 

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 6 வது வீடு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது; சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட உதவும். மனஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவே உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள்.  சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள். போதுமான ஒய்வு மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பராமரிப்பது உங்கள் உடல்  ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

பரிகாரங்கள் :-

  1. சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.
  2. ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும்.
  3. சனிக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் செய்யுங்கள்.
  4. சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.
  5. நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுங்கள்.
  6. முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.