Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
ஓணம் 2025: கேரளாவில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது | வரலாறு, சடங்குகள் & சிறப்பம்சங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஓணம் 2025: கேரளாவில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது

Posted DateAugust 29, 2025

ஓணம் என்பது கேரளாவின் மிக முக்கியமான கலாச்சார திருவிழாவாகும். ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆழமான பாரம்பரிய உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. கேரளாவின் அரசுத் திருநாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒணம், அறுவடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் மலையாள சமூகங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. மகிழ்ச்சி நிறைந்த இந்த பத்து நாட்கள் கொண்ட திருவிழா செழிப்பு, ஒருமைப்பாடு மற்றும் இயற்கையின் அருளுக்கு நன்றியுணர்வை பிரதிபலிக்கிறது. 2025ஆம் ஆண்டில் ஒணம் ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த வலைப்பதிவில் 2025 ஆம் ஆண்டின் ஒணத்தேதிகள், திருவிழாவின் புராணக் கதைகள், அதன் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் கேரளா முழுவதும் அது எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதைக் காணலாம்.

மகாபலி வரலாறு – தானம், தர்மம் மற்றும் ஒணத்தின் முக்கியத்துவம்

ஓணம் என்பது ஒரு அறுவடை திருவிழாவாகவும், கேரளாவின் புராண புகழ்பெற்ற பொற்காலத்தை நினைவுகூரும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்தியப் புராணங்களில் பக்தி, தர்மம், தானம் ஆகியவற்றில் சிறந்த எடுத்துக்காட்டாக பெயர் பெற்றவர் மகாபலி. இவர் ஒரு அசுர அரசராக இருந்தாலும், இவரது நற்பண்புகள், மக்களின் நலனில் காட்டிய அக்கறை, தன்னலமற்ற தான மனப்பான்மை ஆகியவை அவரை வரலாற்றில் அமரத்துவம் அடையச் செய்தது.

மகாபலியின் வம்சம் மற்றும் பிறப்பு

மகாபலி, பிரசித்தி பெற்ற பக்தனான பிரகலாதனின் பேரன். பிரகலாதன் விஷ்ணுவின்  தீவிர பக்தன்; அவனது வழியில், வந்த மகாபலிக்கும் விஷ்ணு மீது  அன்பு இருந்தது. மகாபலியின் தந்தை விரோசனன். இதனால், மகாபலி பிறந்த வீட்டில் பக்தி, அறிவு மற்றும் வலிமை ஆகியவை கலந்து இருந்தன.

மகாபலியின் ஆட்சிக் காலம்

மகாபலி அரசனாக இருந்தபோது, அவர் ஆட்சி செய்த நிலம் வளமுடன் இருந்தது. அவரது இராச்சியத்தில் பசியால் யாரும் தவிக்கவில்லை. அவர் எப்போதும் உண்மை, தர்மம் கடைப்பிடித்தவர். மக்களை அன்போடு நடத்தினார். அனைவரும் அவரை போற்றி வாழ்ந்தனர். இதனால் அவர் புகழ் அதிகரித்து, பூமியிலிருந்து தேவலோகத்திற்கே சென்றது.

அசுரர்களின் ஆற்றல் அதிகரித்ததால் தேவர்கள் கவலையடைந்தனர். மகாபலி நடத்தும் யாகங்கள் மூலம் அவர் சக்தி பெருகியது. இதனால், இந்த சமநிலையை காக்க, விஷ்ணு அவதாரம் எடுக்க முடிவு செய்தார்.

வாமன அவதாரம் மற்றும் மூன்று அடிகள் நிலம்

விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து, பிரம்மச்சாரி சிறுவனாக மகாபலியின் யாகசாலைக்கு வந்தார். வாமனன் மிக அழகான குட்டிச் சிறுவனாக, கையில் குடை, கமண்டலம் ஏந்தி வந்தார். தன்னிடம் ஏதாவது வேண்டும் என வேண்டி வருபவருக்கு எதையும் கொடுப்பதாக மகாபலி வாக்கு அளித்து இருந்ததால். “குழந்தையே, என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்க, வாமனன் பதில் அளித்தான்:
“மூன்று அடிகள் நிலம் வேண்டும்.” மகாபலி சிரித்தான்.
“மூன்று அடிகள் நிலமா? நான் பூமியை ஆள்கிறவன். யானைகள், குதிரைகள், பொன்னும் வைரமும் அனைத்தும் உனக்கு தருகிறேன். ஆனால் மூன்று அடிகள் நிலம்தானா உனக்குத் தேவை எனக் கேட்டான்?”வாமனன் மென்மையாகச் சொன்னான்:
“ஆம், எனக்கு அதுதான் வேண்டும்.” மகாபலி உடனே சம்மதித்தார். அப்போது அவரது குரு சுக்ராச்சாரியார் எச்சரித்தார்:
“இவன் விஷ்ணு! உன்னை சோதிக்க வந்திருக்கிறான். கொடுக்காதே!”ஆனால் மகாபலி தர்மத்தை மீற விரும்பவில்லை.
“நான் ஒருவரிடம் கொடுப்பதாகச் சொன்னால், அதை நிறைவேற்றுவேன்,” என்று உறுதியுடன் கூறி, வாமனனுக்குக் கோரியதை வழங்கினார்.உடனே வாமனன் பெருவடிவமாக மாறி திரிவிக்ரமன் ஆனார்.முதல் அடியில் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கான இடமில்லை! அப்போது மகாபலி தலையை குனிந்து,
“மூன்றாவது அடியை எனது தலையில் வை,” என்றார். வாமனன் அவ்வாறு செய்தார். அதனால் மகாபலி பாதாளத்திற்கு தள்ளப்பட்டார்.  மகாபலி விஷ்ணுவிடம் வேண்டினார்:
“எனது ராச்சிய மக்கள் எனை மிகவும் நேசிக்கிறார்கள். எனவே ஆண்டுக்கு ஒரு முறை அவர்களை சென்று பார்க்க அனுமதி தாருங்கள்.” விஷ்ணு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அதன்படி, மகாபலி ஆண்டுதோறும் தனது  மக்களைப் பார்க்க வருகிறார் என்ற நம்பிக்கையில் ஒணநாள் (Onam) கொண்டாடப்படுகிறது.

ஒணத்தின் முக்கியத்துவம்

கேரளாவில் ஒணம் என்பது மிகப் பெரிய பண்டிகை. மகாபலி தனது  மக்களைச் சந்திக்க வரும் நாளாக இதை மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த நாளில்:

∙ மக்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிக்கிறார்கள்.

∙ புக்களம் (பூ கோலம்) போடுகிறார்கள்.

∙ விருந்து வைத்து, பாடல்கள் பாடி மகிழ்கிறார்கள்.

“மாவேலி நாடு வாழ்ந்த காலம், மனிதரெல்லாம் ஒத்த காலம்” என்ற பொன்மொழி. அதாவது மகாபலியின் ஆட்சியில் அனைவரும் சமமாக, சந்தோஷமாக வாழ்ந்தனர்.

கேரளாவில் ஓணம் எப்படி கொண்டாடப்படுகிறது?

ஓணம் திருநாளை கேரளாவில் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். மதம், சாதி எனப் பாராது, அனைவரும் பின்பற்றும் முக்கியமான பாரம்பரியங்கள் பின்வருமாறு:

பூக்களம் (Pookkalam): மஹாபலி மன்னரை வரவேற்க, வீட்டின் வாசலில் பல அடுக்குகளாக அழகிய பூச்சித்திரம் போடுவது.


• ஓண சடைய  (Onasadya): வாழை இலையில் பரிமாறப்படும் 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கேரள உணவுகளுடன் கூடிய சைவ விருந்து.


• வள்ளம் காலி (Vallamkali): புகழ்பெற்ற  படகுப் பந்தயம், குறிப்பாக அனிஜம் மற்றும் திருவோணம் நாளின் பின்னர் நடைபெறும்.


• புலிக்கலி மற்றும் நாட்டுப்புற நடனங்கள்: புலிக்கலி (புலி நடனம்), கத்தகளி, திருவதிரா போன்ற கலை நிகழ்ச்சிகள் கேரளத்தின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.


• பாரம்பரிய விளையாட்டுகள் : பந்து விளையாட்டுகள், வில்லாட்டம், கயிறு இழுத்தல் போன்ற குழு விளையாட்டுகள் குடும்பங்களும் மாணவர்களும் விளையாடுகிறார்கள்.


• புதிய உடைகள் : புதிய பாரம்பரிய கேரள உடைகளை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒணம் என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல; அது ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் கேரளாவின் மதச்சார்பற்ற உணர்வுகளைப் பற்றிய ஒரு கற்றல் அனுபவமாகும். மாணவர்கள் ஒணத்தின் கதையைத் தலைமைத்துவம், தாழ்மை, சமூக நலன் போன்ற மதிப்புகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். இந்த விழா பின்வருவனவற்றை ஊக்குவிக்கிறது:

சமத்துவம் மற்றும் தாராள மனப்பான்மை: மகாபலியின் ஆட்சி நீதி மற்றும் கருணை நிலவிய காலத்தை பிரதிபலிக்கிறது.

பண்பாட்டு மரபு: நாட்டுப்புறக் கலைகள், சமையல் மரபுகள், சமூகச் சந்திப்புகள் ஆகியவை கேரளத்தின் அடையாளத்தைப் பாதுகாக்கின்றன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: பூக்கலம் போன்ற மலர் அலங்காரங்களில் வலியுறுத்துவது இயற்கைக்கு மரியாதை செலுத்துவதை ஊக்குவிக்கிறது.

ஒற்றுமை: பின்னணி அல்லது மதம் எதுவாயினும், எல்லா சமூகங்களும் ஒணத் திருவிழாவில் இணைந்து கொண்டாடுகின்றனர்.