AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள் - Astroved
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

முருகனின் 16  திருக்கோலங்கள்

“முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். அந்த அழகனின் 16 திருக்கோலங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சக்திதரன் : திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம். ஒரு முகம் இரு கரங்கள். இந்த முருகனை நினைத்தால் நினைத்தது நடக்கும்

கந்தசாமி  – பழனி மலை மீது இருந்து அருள் புரிபவன்.  ஆண்டியின் திருக்கோலம். சகல காரியங்களும் சித்தி ஆகும்.

கஜவாகனர் : யானை மீது அமர்ந்த கோலம். நான்கு திருக்கரங்கள். இவரை நினைத்தால்  துன்பங்கள் யாவும் விலகி ஓடும்.

சரவணபவன் : சரவணன் – சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவர். பார்வதி அன்னையால் ஆறுமுகத்துடன் ஒரு முகமானவர். வீரத்தை அளிப்பவர்.

தேவசேனாபதி: தெய்வானையை மணந்த கோலம். இவரை தரிசித்தால் மங்களகரமான வாழ்வு கிட்டும்.

சுப்பிரமணியன் : ஒரு முகம். நான்கு கரங்கள். வினைகளை நீக்கி இன்பங்களை அளிப்பவர்

கார்த்திகேயன் :  கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தவர். ஆறுமுகம். பன்னிரண்டு கரங்கள் கொண்டவர். கார்த்திகை நட்சத்திர தினத்தில் இவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

குமரன் : நான்கு கரங்களுடன் தெய்வானையுடன் காட்சி தருபவர். இவரை வேண்டினால் திருமணம் விரைவில் நடக்கும்

ஷண்முகன் :  ஆறு முகம் பன்னிரண்டு கரங்களுடன் காட்சி தருபவர். திருச்செந்தூரில் உள்ள முருகன். இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிட்டும்.

தாரகாரி :  தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். போர்க் கோலம் பூண்டவர். இவரை வணங்கினால் மாயையில் இருந்து விடுபடலாம்.

வள்ளி மணாளன்: வள்ளியை மணம் புரிந்த கோலம். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும்.

பாலசுவாமி: பாலன் வடிவம். ஒரு கரத்தில் தாமரை மலர். இன்னொரு கரம் இடை மீது இருத்திய கோலம். இவரை வணங்குவதன் மூலம் அங்கக் குறைபாடுகள் அகலும்

சேனானி: ஆறு முகம். பன்னிரு கரங்கள். தேவிகாபுரம் ஆலயத்தில் இந்த உருவம் உள்ளது. இவரை வணங்கினால் பகை அழியும். பொறாமை நீங்கும்.

கிரௌஞ்சபேதன்: கிரௌஞ்ச மலை வடிவில் இருந்த அசுரனை அழித்த கோலம். இவரை வணங்குவதன் மூலம் மனச் சஞ்சலங்கள் அகலும்

சிகி வாகனர்: மயில் மீது இருக்கும் உருவம். அழகுடன் இருக்கும் வடிவம். இவரை வணங்க இன்பமான வாழ்வு அளிப்பவர்

பிரம்ம சாஸ்தா:பிரம்மனை சிறையில் அடைத்த கோலம். சிறுவாபுரியில் இந்த கோலம் உள்ளது. இவரை வணங்கினால் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறலாம்.