Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Guru Peyarchi Palangal Mesham 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Guru Peyarchi Palangal Mesham 2024

Posted DateMarch 16, 2024

மேஷம் ராசி குரு பெயர்ச்சி பொதுப்பலன் :

குருபெயர்ச்சி காலம் மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை.

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது  குருவின்  பார்வை உங்கள் ராசிக்கு  6 வது வீடு, 8வது வீடு மற்றும் 10வது வீட்டில் இருக்கும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள்  விவேகத்துடன் செயல்படுவீர்கள். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். என்றாலும் இந்த ஆண்டின் இறுதியில் உறவில் சில போராட்டங்கள் இருக்கலாம்.  வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். ஊக வணிகம் மூலம்  ஆதாயம் கிட்டும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் அதிர்ஷ்டம். கூடும்.

இருப்பினும், ​​அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை, உங்கள் நிதி வளர்ச்சி குறையலாம் அல்லது முன்பை விட குறைவான பணம் சம்பாதிக்கலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம். குரு நன்மை தரும் கிரகம். எனவே இது உங்கள் குடும்பம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கட்டுப்படுத்தும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். பொருள் மற்றும் செல்வம் சேர்ப்பீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும்.  பொருளாதார ஆதாயங்களுக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும். சிறந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான நற்பலனை அனுபவிப்பீர்கள்.

உத்தியோகம்:

உங்கள் தொழிலில் ஆபத்துக்களை எடுக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கும். கடன் தொல்லை குறையும். தொழிலில் போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் கூடும். நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணி புரிவீர்கள். உங்கள் பணியிடத்தில் நீங்கள் சுதந்திரமான மனநிலையுடன் செயல்படுவீர்கள்.  மேலும் உங்கள் முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காதல் / குடும்ப உறவு  : 

திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு உங்களுக்கு கிட்டும். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். மூத்த உடன்பிறப்புடனான  உறவில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ ஈகோவை விட்டுத் தள்ளுங்கள். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

காதலர்கள் தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். உறவில் நல்லிணக்கத்தைப் பராமரிக்க சுமுகமான அணுகுமுறை தேவை. உங்கள் துணையின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். அக்டோபர் 2024 முதல் உங்கள் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம், மேலும் சிலர் 2024 இறுதியில் பிரிவினையை சந்திக்கலாம்.

திருமண வாழ்க்கை :-

குடும்ப வாழ்வில் அமைதி காணப்படும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். உங்கள் துணையின் அன்பையும் அரவனைப்பையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். குழந்தைப் பேறு எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

நிதிநிலை :

இந்த பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் கருத்து பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும்.  நீங்கள் சிறந்த வருமானத்தை ஈட்டுவீர்கள். தொழில் மூலம் லாபம் வரும். உங்கள் முயற்சி மூலமாகவும் பொருளாதாரத்தில் முன்னேறுவீர்கள். 2024-2025 ஆம் ஆண்டின் இந்த பெயர்ச்சி காலத்தில்  குடும்ப உறுப்பினர்களுடன் சில பயணங்கள் அல்லது யாத்திரைகள் இருக்கலாம். அது தொடர்பான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.

மாணவர்கள் :-

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில இது சிறந்த காலகட்டம் ஆகும். மாணவர்கள் பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளி நாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறக் காண்பார்கள். சிலருக்கு கல்விக்கான கடன் தொகை கிட்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள், வெற்றியை அடைய கடினமாக உழைத்து, கவனம் செலுத்த வேண்டும். சக மாணவர்கள்  நட்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். மேலும் நீங்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

ஆரோக்கியம் :-

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதனை தக்க வைக்க சமச்சீரான உணவை உட்கொள்வது அவசியம். பச்சை காய்கறிகள் மற்றும் உலர் பழங்கள் கொண்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும்  இருக்காது.  ஆனால் சிலருக்கு  உடல் எடை அதிகரிக்கலாம், மேலும் சிலர் அதிக கொழுப்பு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படலாம். அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமே சிறந்த செல்வம். எனவே உடற்பயிற்சி செய்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது.

பரிகாரங்கள் :-

1. தினமும் உங்கள் நெற்றியில் குங்குமத் திலகத்தை வைப்பது  உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும்.

2. ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணத்தை நன்கொடையாக வழங்குவது, குறிப்பாக அனாதை குழந்தைகளுக்கு உதவுவது, குருபகவானின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும்.

3. ஒவ்வொரு மாதமும் வியாழன் அன்று தேவைப்படுபவர்களுக்கு பருப்பு, வெல்லம், நெய் ஆகியவற்றை வழங்குவதும் உங்களுக்கு புண்ணியத்தைத் தரும்.

4. விஷ்ணு பகவானுக்கு இனிப்புகள் செய்து பிரசாதமாகப் படைத்து, அதை உட்கொள்வது ஆன்மீக நிறைவுக்கு வழிவகுக்கும்.

5) ஒவ்வொரு மாதமும் ஒரு வியாழக்கிழமை பிறருக்கு   இனிப்புகளை வழங்குங்கள்.

6) ஒவ்வொரு மாதமும் வியாழன் அன்று அனாதை அல்லது வீடற்றவர்களுக்கு ஒரு பங்களிப்பை வழங்கவும்.