Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
எந்தெந்த நாளில் எந்தெந்த கடவுளை வணங்கலாம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

எந்தெந்த நாளில் எந்தெந்த கடவுளை வணங்கலாம்

 எல்லா நாட்களிலும் இறைவனை வழிபடலாம். இறைவனை வழிபடுவதற்கு நாள் நேரம் என்று எதுவும் தனியாக இல்லை. என்றாலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கடவுளை வணங்குவதன் மூலம் நம்முள் இறை ஆற்றல் அதிகரிக்கும். வாரத்தின் ஒவ்வொரு நாளும் எந்த கடவுளை வணங்குவது சிறப்பு என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள்.

செவ்வாய்கிழமை விநாயகர், துர்க்கை, அம்மன் மற்றும் அனுமன் ஆகியோரை வணங்க உகந்த நாள்.

புதன் கிழமை விநாயகப் பெருமான் மற்றும்  பகவான் வணங்க உகந்த நாள்.  

வியாழன் அன்று பகவான் விஷ்ணுவையும் மகா லட்சுமியையும் வணங்க உகந்த நாள். மேலும் அன்று குரு, தட்சிணாமூர்த்தி மற்றும் மகான்களை வணங்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி, சந்தோஷி மா, அன்னபூர்ணேஸ்வரி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை  சனி பகவானை வணங்க வேண்டும். 

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள்.

 திங்கட்கிழமை:

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே திங்ககிழமை சிவனுக்கு விரதமிருக்க சிவனை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடலாம்.சிவபெருமான் நமது பக்தியில் எளிதில் மகிழ்வார் என்பது ஐதீகம். விரதம் இருக்கும் பக்தர்கள் ஒரு முறை மட்டுமே உணவு உண்ண வேண்டும். மேலும் அன்று முடிந்தால் சிவாலயம் சென்று அரச்சனை பூஜை முதலியவற்றை செய்யலாம். அன்று நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரம்ஆகும். சிவபக்தர்கள்  அன்று சிவபுராணம் படிக்கலாம். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன்களைப் பெற சோமவார விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். மற்றவர்கள் மகிழ்ச்சியான, வளமான குடும்ப வாழ்க்கைக்காக விரதம் இருக்கலாம்.


செவ்வாய்கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளில் அனுமன் லிசா  மந்திரத்தை சொல்லலாம். செவ்வாய் கிழமைகளில் துர்கை அம்மனுக்கு விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால், வாழ்க்கை வளம் பெம்.இருப்பவர்கள் உப்பு கலந்த உணவை உட்கொள்வதைத் தவிர்

புதன்:

புதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்த எனவே புதன் கிழமை அன்று விநாயகக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியமும் சிறப்பாக நடக்கும். புதவாரம் எனப்படும் இந்நாள் கிருஷ்ணருக்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.இந்நாளில் துளசி இலைகளை கிருஷ்ணருக்கு அர்பணித்து ஹரே கிருஷ்ண பஜனைகளை மேற்கொள்ளலாம்.இந்த நாள் புதிய முயற்சிகளைத் தொடங்க மிகவும் சாதகமானது மற்றும் விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அதிர்ஷ்டத் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் அன்னதானமும் வழங்க

வியாழ

வியாழகிழமை தட்சணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு  உகந்தது. எனவே வியாழக்கிழமை அன்று இந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும். ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தி வணங்கவும் இந்நாள் உகந்தது.

  வெள்ளிக்கிழமையில் அம்பிகை அல்லது சக்தி வழிபாடும் மிகவும் விசேஷமானது.இந்த நாளில் அம்மனின்  அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

 சனிக்கிழமைகாளி  தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும்.

 நவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள். சூரியனே உலக இயக்கத்துக்கு காரணமானவர்.

இதில்லாமல் ஏகாதசி திதியில் பெருமாளையும், சதுர்த்தியில் வினாயகரையும், கிருத்திகையில் முருகனையும், பிரதோசத்தில் நந்தி பகவானையும், அஷ்டமியில் கால பைரவரையும் வணங்குதல் வேண்டும்.