தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027

Posted DateJuly 16, 2024

தனுசுராசி சனி பெயர்ச்சி 2025 பொதுப்பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 4ம் வீட்டில் நடக்கும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.

இந்த காலக்கட்டத்தில் ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம்  அதிகரிக்கும். ஆத்ம உணர்வு காண அதாவது சுய அறிதல் உணர நீங்கள் முயற்சி மேற்கொள்வீர்கள். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். அதன் மூலம் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வாழ்வில் வளமும் செழிப்பும் காண்பீர்கள். தடைகளை தகர்த்து எரியும் மன வலிமை உங்களிடம் இருக்கும். எதிலும்  சிந்தித்து செயல்படுவீர்கள்.

உத்தியோகம் :

உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். என்றாலும் அதிக பணிச்சுமை காணப்படலாம். இதனால் பணிகளை முடிப்பதில் தாமதங்களை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள்  ஏற்படலாம் என்பதால்  எச்சரிக்கையாக இருங்கள்.  திட்டமிட்டு பணிபுரிவது நல்லது. பணியிடத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம். என்றாலும் நீங்கள் திறமையுடன் செயல்பட்டு அவற்றை முடித்து அளிப்பீர்கள். இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரலாம். மற்றும் அவை வேலையில் உங்கள் செயல்திறனை பாதிக்கலாம். வேலையில் புதிதாக சேர்ந்தவர்கள்  சலுகைகளைப் பெறலாம், ஆனால்  குறைந்த வருமானமே வரலாம்.  நீங்கள் தொழில் செய்பவர் என்றால் உங்கள்  தொழில் முயற்சிகளில் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் திட்டங்களில் வெற்றியை அடைவதில் தாமதத்தை எதிர்பார்க்கலாம். புதிய முயற்சிகளை  மேற்கொள்ள  இந்தக் காலகட்டம் சரியான நேரமாகத் தெரியவில்லை; எதிர்பார்த்த வருமானம் சரியான நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்பதால் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

Sagittarius 750

 

காதல் / குடும்ப உறவு :

உங்கள் குடும்பத்தில் தந்தை உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். உங்கள் தாயின் ஆதரவு கிடைக்க தாமதம் ஆகலாம். ​​அவருடனான உங்கள் பிணைப்பு இறுதியில் மதிப்புமிக்க வாழ்க்கை அனுபவத்தின் ஆதாரமாக மாறும். உங்கள் சகோதர சகோதரிகளுடனான  உறவு சிறப்பாக இருக்கலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடித்து அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஒற்றையர்கள்  உறுதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

திருமண உறவு :-

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவழிப்பீர்கள். என்றாலும் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் எழலாம். விட்டுக்கொடுத்து  செல்வதன் மூலம் சுமுக உறவை பராமரிக்கலாம். மேலும், இணக்கமான  மற்றும் நிலையான உறவுகளுக்கு பெயர்ச்சி சாதகமாக இருப்பதால், அன்புக்குரியவர்களுடன் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நேரத்தை எதிர்பார்க்கலாம்.

நிதிநிலை :-

பொருளாதார ரீதியாக இது வரவேற்கத்தக்க பெயர்ச்சியாக அமையலாம். லாபமும் ஆதாயங்களும் பெறுவீர்கள். அது உங்களின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்திற்கு வழிவகுக்கும். முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். பணப்புழக்கம் சீராக இருக்கும். நீங்கள் ஆடம்பர செலவுகளை மேற்கொள்ள நினைக்கலாம். அசையாச் சொத்துகளின் முதலீடுகள் நேர்மறையான முடிவுகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கமிஷன் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடத்தக்க லாபத்துடன் சாதகமான விளைவுகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பின்னடைவை சந்திக்க நேரிடும்.

மாணவர்கள் :-

இந்தப் பெயர்ச்சி காலக்கட்டத்தில் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துவார்கள். கடின உழைப்புகளை மேற்கொண்டு கல்வியின் இலக்குகளை அடைவார்கள்.  ஆராய்ச்சி துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் முன்னேற்றம் காண்பார்கள். வெற்றி அடைவார்கள்.  கல்வி உதவித் தொகை பெற முயற்சி செய்யும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். ஒரு சிலர்  உயர்கல்வியைத் தொடரலாம். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.

ஆரோக்கியம் :-

உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  குறிப்பாக செரிமானம் அல்லது இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். அதிக மருத்துவச் செலவுகளைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை  மற்றும் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. உங்களுக்கு நாள்பட்ட நோய் இருந்தால், வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ளுங்கள். சத்தான உணவை உட்கொள்ளுங்கள். மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை இணைத்துக்கொள்ளுங்கள். போதுமான தூக்கம் மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பரிகாரங்கள் :-

  1. சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.
  2. ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும்.
  3. சனிக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் செய்யுங்கள்.
  4. சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.
  5. நாய்கள், காகங்கள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமையன்று உணவு மற்றும் தண்ணீருடன் உணவளிக்கவும்.
  6. முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.