Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
தன தானியம் பெருக சிவ வழிபாடு – வளம் தரும் ஆன்மீக இரகசியங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தன தானியம் பெருக சிவ வழிபாடு – வளம் தரும் ஆன்மீக இரகசியங்கள்

Posted DateSeptember 2, 2025

சிவ வழிபாடு என்பது வெறும் பூஜை அல்ல, அது வாழ்க்கையை செழிப்பாக்கும் சக்தி! குறிப்பாக, வீட்டில் தானியங்கள், உணவு பொருட்கள் குறைவின்றி இருக்க வேண்டும் என்றால் சிவபெருமானை வழிபடுவது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த உலகில் யாரும் வறுமையுடன் வாழ விரும்புவதில்லை. நமக்கு தேவையான அன்னமும் அன்பும் நிரம்பிய வாழ்க்கையே எல்லாரின் கனவு. “அன்னம்” என்பது வாழ்வின் அடிப்படை. நம் வீட்டில் தானியம் நிறைந்து கிடைப்பது மட்டுமல்ல, தொடர்ந்து பெருகிக்கொண்டே போவது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் குறிக்கிறது. இன்றைய கட்டுரையில், சிவபெருமானை வழிபட்டு வீட்டில் தானியம் பெருகும் அற்புத பரிகாரம் பற்றி அறிந்துகொள்வோம்.

ஏன் சிவ பரிகாரம்?

சிவபெருமான் தியானம், தைரியம், தர்மம் ஆகியவற்றின் கடவுள். அவரை வழிபடும் போது நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி நிலைகொள்கிறது. அவர் அருளால் அன்னதான பாக்கியம் மற்றும் வளமையான வாழ்வு கிடைக்கும். சிவபெருமானின் அருளை எளிமையான பரிகாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதில் முக்கியமானது தானிய பரிகாரம்.

தானிய குறைவு ஏற்படக் காரணங்கள்

தானியக் குறைவு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் முக்கியமானதாக சமையலறை வடக்கு-கிழக்கு திசையில் இல்லாமல் இருப்பது. உணவுப் பொருட்களை அதிகமாக வீணாக்கும் பழக்கம். இது அன்னலட்சுமியை அவமதிப்பது போன்றது. பித்ரு தோஷம் அல்லது வாஸ்து குறைபாடு. பருவ காலங்களில் பஞ்ச பூதங்கள் சமநிலை இல்லாமை.இந்தக் காரணங்களை சரிசெய்யும் ஒரே வழி சிவபெருமானை உளமாற வழிபடுவது.

சிவபெருமானுக்கும் தானியத்திற்கும் உள்ள உறவு

சிவபெருமான் அன்னபூர்ணேஸ்வரியின் அன்புக்குரியவர். அன்னபூர்ணேஸ்வரி “அன்னம் பூரணம்” எனும் சக்தியுடன் இருப்பதால், சிவனை வழிபடும்போது தானாகவே அன்னபூர்ணா தேவி அருள் நம்மை சேரும். அதனால் தானிய பரிகாரம் சிவ வழிபாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும்.

தானியம் பெருகும் சிவ பரிகாரம்

இந்த பரிகாரம் பிரதோஷம், சதுர்த்தசி, திங்கட்கிழமை போன்ற  நாட்களில் நல்ல நேரம் பார்த்து செய்யலாம். குறிப்பாக மாசி மாதம், ஆவணி மாதம், கார்த்திகை மாதம் மிகுந்த பயன் தரும்.

தேவையான பொருட்கள்

∙ அபிஷேகப் பொருட்கள் குறைந்தபட்சம் பால்

∙ வெள்ளை அரிசி – 1 கிலோ

∙ கருப்பு உளுந்து – 250 கிராம்

∙ எள் – 100 கிராம்

∙ ஒரு வெள்ளி அல்லது பித்தளைக் கலசம்

∙ கங்கைத் தண்ணீர் அல்லது தூய்மையான நீர்

∙ பில்வ இலைகள் – 11

∙ சிவ மந்திரம் ஜபம் செய்யும் மனநிலை

பரிகார முறைகள்

இந்த பரிகாரம் செய்ய திங்கட்கிழமையும் பிரதோஷமும் உகந்த நாட்கள்.  மனப்பூர்வமாக இந்த பரிகாரம் செய்ய வேண்டும். சடங்காக மட்டும் செய்ய வேண்டாம். காலை 6.00 மணிக்குள் சிவ ஆலயத்திற்கு செல்லுங்கள். அபிஷேகப் பொருட்கள் மற்றும்  அரிசி, உளுந்து, எள் எடுத்துச் செல்லுங்கள்.  கலசத்தில் கங்கைத் தண்ணீரை நிரப்பி அதில் பில்வ இலைகளை போடுங்கள். இதனைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். “ஓம் நமசிவாய” மந்திரத்தை குறைந்தது 108 முறை ஜபியுங்கள்


அபிஷேகம்  முடிந்தபின் அரிசி, உளுந்து, எள் ஆகியவற்றை ஆலயத்தில் உள்ள அன்னதானத்திற்காக வழங்குங்கள். அவற்றின்
ஒரு சிறு பகுதியை வீட்டிற்கு கொண்டு வந்து சமையலறையின் கிழக்கு மூலையில் வையுங்கள். இது செல்வ சக்தியை ஈர்க்கும்.

இந்த பரிகாரம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

“அன்னபூர்ணே சாதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பர்வதி”

இந்த ஸ்லோகம் சொல்லுவதால், அன்னபூர்ணா தேவியும் சிவபெருமானும் உங்களுடைய குடும்பத்தில் உணவின் வளத்தை அளிப்பார்கள்.

வீட்டில் செய்வதற்கான எளிய முறைகள்

ஆலயத்திற்கு செல்ல முடியாவிட்டால் வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்:

திங்கட்கிழமையன்று ஒரு பித்தளை அல்லது வெள்ளி பாத்திரத்தில் அரிசி நிரப்பி, மேல் பில்வ இலை வைத்து, “ஓம் நமசிவாய” 108 முறை சொல்லுங்கள். அந்த அரிசியை அடுத்த நாள் அன்னதானத்திற்கு வழங்குங்கள் அல்லது பசியோடு இருப்பவருக்கு உணவு செய்து அளிக்கவும்.

இந்த பரிகாரத்தின் அற்புத பலன்கள்

வீட்டில் தானியம் நிறைந்திருக்கும். வீணாக்கும் பழக்கம் நீங்கும். குடும்பத்தில் சண்டைகள் குறையும்.  பித்ரு தோஷம், வாஸ்து குறைபாடு சீராகும்.  மனநிம்மதி, செல்வ வளம் ஏற்படும். பஞ்சபூதங்களில் அன்னை பூமி நமக்கு தானியத்தை அளிக்கிறார். சிவன் அந்த பஞ்சபூத நாயகன். அவரை வழிபடும்போது பூமி சக்தி (அன்ன வளம்) அதிகரிக்கும். அதனால் இந்த பரிகாரம் சரியான சக்தியை ஈர்த்து வளத்தை அதிகரிக்கும்.

முடிவுரை

உங்கள் வீட்டில் தன தானியம் பெருக வேண்டும் என்றால்  இந்த பரிகாரத்தை உளமாற செய்யுங்கள். சிவபெருமானின் அருள் உண்டானால் அன்னத்திலும், செல்வத்திலும் குறை ஏற்படாது. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால், வீட்டில் தானியம் பெருகுவது மட்டுமல்ல, மனத்தில் ஆனந்தமும் பெருகும்.