Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சோழிப் பிரசன்னம் - வாழ்க்கை சந்தேகங்களுக்கு ஆன்மிக வழிகாட்டி
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சோழிப் பிரசன்னம் – வாழ்க்கையின் சந்தேகங்களுக்கு ஆன்மிக வழிகாட்டி

Posted DateSeptember 19, 2025

சோழிப் பிரசன்னம் என்றால் என்ன?

மனித வாழ்க்கையில் எப்போதும் கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கும். என்ன செய்வது? எந்த பாதையைத் தேர்வு செய்வது? என்னுடைய முடிவு சரியா? இந்தக் குழப்பங்களுக்கான வழிகாட்டுதலாக, தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் ஆன்மிக வழிமுறையான சோழிப் பிரசன்னம் முக்கிய பங்காற்றுகிறது. சோழிப் பிரசன்னம் என்பது கேள்வி-பதில் முறையில் நடக்கும் ஒரு ஆன்மிக வழிமுறை. திருமண வாழ்வு, தொழில், உடல் நலம், நிதி நிலை, குடும்ப ஒற்றுமை, குழந்தைப் பாக்கியம் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு உடனடி பதில் தரும் மரபு இது.

சோழிப் பிரசன்னத்தின் தோற்றம் மற்றும் வரலாறு

“சோழி” என்ற சொல் பழங்கால நாணயங்களையோ அல்லது சிறிய சிப்பிகளையோ குறிக்கும். சோழர் காலத்தில் ஆலயங்களில் அர்ச்சகர்கள் பக்தர்களின் கேள்விகளை சோழி மூலம் தீர்மானித்தனர் என நம்பப்படுகிறது. பின்னர் இது ஆலய வழிபாட்டைத் தாண்டி, பொதுமக்கள் இடையிலும் பரவியது. இந்த மரபு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் வேறு பெயர்களில் நடைமுறையில் உள்ளது. முக்கியமாக கேரளாவில் இது மிகவும் பிரசித்தம். ஆனால் தமிழரின் பண்பாட்டில் சோழிப் பிரசன்னம் என்பது தனித்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.

சோழிப் பிரசன்னம் எதற்காக செய்யப்படுகிறது?

வாழ்க்கையில் பல முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நம் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நம்பிக்கையுடன் ஆலோசனை தேவைப்படும் போது சோழிப் பிரசன்னம் உதவுகிறது. என் திருமணம் எப்போது நடக்கும்?தொழில் முன்னேற்றம் கிடைக்குமா?வீட்டை வாங்கும் முயற்சி வெற்றியா?வெளிநாடு போவது சாத்தியமா?கடன் பிரச்சினை தீருமா? எனக்கு வேலை கிடைக்குமா? உத்தயோக உயர்வு கிட்டுமா? இப்படி பல கேள்விகளுக்கான வழிகாட்டுதலை மக்கள் இம்முறையின் மூலம் பெறுகின்றனர்.

சோழிப் பிரசன்னத்தில் சோழிகள்

சோழிப் பிரசன்னம் செய்வது மிக எளிது. பொதுவாக இரண்டு சிறிய சிப்பிகள் அல்லது சோழிகள் பயன்படுத்தப்படும். மேலும் பல சோழிகள் வைத்தும் பலன் காணப்படுகிறது. 12 சோழிகள்  108 சோழிகள் என பல சோழிகள் வைத்தும் பிரசன்னம் பார்க்கப்படுகிறது

சோழிப்பிரசன்னம் காணும் முறை:

முதலில், மனதில் ஒரு தெளிவான கேள்வியை வைத்துக் கொள்ள வேண்டும். சோழிகள் அல்லது சிப்பிகள் எடுத்து, மந்திரம் உச்சரித்து கேள்வியை மனதில் கூற வேண்டும்.சோழிகள் எவ்வாறு விழுகின்றன என்பதைப் பார்த்து, ஆம், இல்லை, காத்திருக்கவும் போன்ற அடிப்படை பதில் சொல்லப்படும். அனுபவமுள்ளவர்கள் இதற்கு மேலாக விரிவான விளக்கத்தையும் அளிப்பர். இந்த முறையின் சிறப்பு என்னவெனில் கேள்வி கேட்பவரின் நம்பிக்கையும் நேர்மையும் அதிகமாக இருக்கும் போது பதில் மிகவும் துல்லியமாக வரும் என்று நம்பப்படுகிறது.

தெய்வப் பிரசன்ன சோழி

கோவிலில் தெய்வம் முன் பிரசன்னம் செய்யப்படும்.  சோழிகள் விழும் விதத்தை பார்த்து அந்த தெய்வத்தின் அருளை அறிகிறார்கள். அனைத்தும் திறந்தால்  தெய்வ அருள் பெருகும். அனைத்தும் மூடிஇருந்தால் தெய்வ அருள் குறைவு, பரிகாரம் அவசியம் என்பது போல பலன்களை அறிந்து கூறுவார்கள். .

சோழிப் பிரசன்னம்யார் சொல்லுவார்கள்?

பொதுவாக கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள், ஆர்ச்சகர் குடும்பத்தினர், தெய்வத்தின் அடியார்கள்.  சில தென்னிந்திய பாரம்பரிய ஜோதிடர்கள்.  குறிப்பாக அம்மன் கோயில்கள் (மாரியம்மன், காளியம்மன்), முருகன் கோயில்கள், தர்ம சாஸ்தா கோயில்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள். சில ஆன்மிக குருக்கள்

சோழிப் பிரசன்னம் எங்கே செய்யப்படுகிறது?

கோயில்களில் (சிறப்பு அம்மன் கோயில்கள், கிராம தெய்வ ஆலயங்கள்)  சில ஜோதிட மையங்களில்.  சிலர் வீட்டிலேயே தெய்வ அருளால் இதைச் செய்வார்கள். ஜோதிட மையங்களிலும் இந்த பிரசன்னம் கூறப்படுகிறது.

சோழிப் பிரசன்னத்தின் உளவியல் விளக்கம்

பலர் இதை முழுக்க ஆன்மிக நம்பிக்கை என்று கருதினாலும், உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது இது மன அழுத்தம் குறைக்கும் ஒரு கருவி ஆகும்.ஏன் தெரியுமா?ஒருவர் குழப்பத்தில் இருக்கும்போது, சோழிப் பிரசன்னம் மூலம் உடனடி பதில் கிடைப்பதால், மனநிம்மதி கிடைக்கிறது.அந்த நம்பிக்கை அவரது மன அழுத்தத்தை குறைத்து, தீர்மான எடுக்க உதவுகிறது.

இன்றைய காலத்தில் சோழிப் பிரசன்னம்

இன்றும் ஆலயங்களில் சோழிப் பிரசன்னம் நடைமுறையில் உள்ளது. மேலும், டிஜிட்டல் காலத்தில் கூட இதன் பிரபலத்தில் குறைவு இல்லை. ஆன்லைன் சோழிப் பிரசன்னம் கூட உள்ளது.ஆன்லைன்  சில தளங்கள் வீடியோ அழைப்பின் மூலம் சேவைகளை வழங்குகின்றன. மொபைல் ஆப்ஸ் மூலமும் இந்த வசதி இன்று உள்ளது.  சில ஆப்ஸ்களில் கேள்விகளை வைத்து பிரசன்ன பதில் பார்க்கும் வசதி உள்ளது. சமூக ஊடகங்களில் கூட இதற்கான ஆர்வம் அதிகம்.இதன் காரணம் எளிமை, உடனடி பதில், நம்பிக்கை தரும் ஆன்மிக பிணைப்பு.

 சோழிப் பிரசன்னத்தின் நன்மைகள்

ஓருவரின் மனதில் இருக்கும். குழப்பத்தை நீக்குகிறது. மனநிம்மதியை அதிகரிக்கிறது. நமக்கு அவசர தேவை எனும் போது உடனடி பதில் வழங்குகிறது. மனதில் நம்பிக்கையை வளர்க்கிறது. சரியான வழியில்  சரியான முடிவெடுக்க உதவுகிறது. எளிதான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிகிறது. ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது.இதில் முழுமையாக சார்ந்து விடக்கூடாது. இது வழிகாட்டுதலுக்காக மட்டுமே. வாழ்க்கையில் முன்னேற்றம் பெற முயற்சி, திட்டமிடல், பொறுமை ஆகியவை முக்கியம்.

சோழிப் பிரசன்னம் தொடர்பான நம்பிக்கைகள்

கேள்வி கேட்கும் முன் மனதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உண்மையான நோக்கத்தோடு கேள்வி கேட்கப்பட வேண்டும்.  சோழி பிரசன்னம் பெரும்பாலும் காலை அல்லது நல்ல நேரத்தில் செய்யப்படுகிறது.  இதை செய்வதற்கு முன் பிரார்த்தனை செய்வது வழக்கம்.இந்த நம்பிக்கைகள் அனைத்தும், மனதில் நேர்மறை உணர்வை ஏற்படுத்துவதற்கே உதவுகின்றன.

சோழிப் பிரசன்னம் என்பது நம் பண்பாட்டின் ஒரு அரிய ஆன்மிக மரபு. அது வழிகாட்டுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. இன்றைய காலத்திலும், இது ஒரு ஆன்மிக வழிகாட்டல்  போலவே மக்களுக்கு மனநிம்மதியை அளிக்கிறது. வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது இதைப் பயன்படுத்தலாம். ஆனால், உண்மையான முன்னேற்றம் எப்போதும் நம் சிந்தனை, முயற்சி, செயலில் தான் இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இப்போது தொடர்பு கொள்ளுங்கள்