10 புரோகிதர்கள் 25,001 முறை மந்திர ஜபம் செய்யும் பிரம்மாண்டமான சனி பகவான் பீஜாக்க்ஷர மந்திர ஹோமம்
ஜூன் 2, 2019 மாலை 6.30 மணி (பசிபிக் நேரம்)/ இரவு 9.30 மணி (கிழக்கத்திய நேரம்)/ ஜூன் 3, 2019 காலை 7.00 மணி (இந்திய நேரம்) – நேரலை
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
சனி பகவான், ஒரு அபாரமான ஆசிரியர் ஆவார். வாழ்க்கையில் துன்பங்களை சந்தித்தால் மட்டுமே, உங்களால் பாடங்களைக் கற்றுக் கொள்ள இயலும். சனி பகவான் நமது ஆன்மாவைப் பக்குவப் படுத்துவதனால், அவரை மிக முக்கிய கிரகம் என்று கூறலாம். சனியின் தாக்கம் உள்ள காலங்களில், நீங்கள் பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வீர்கள். கடவுளர்கள் கூட இது போன்ற சனி பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில், தெய்வங்கள் கூட, சில பாடங்களைக் கற்றுக் கொண்டே தீர வேண்டும்.
– டாக்டர் பிள்ளை
சனி கிரகத்தின் முக்கியத்துவம் பற்றி டாக்டர் பிள்ளை அவர்களின் விளக்கம்
வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களுக்குள்ளும் மிகவும் கண்டிப்பான, ஒழுங்கு முறை தவறாத கிரகம், சனி ஆகும். இது உங்கள் வாழ்க்கையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உங்களது பூர்வ ஜன்ம கர்ம வினைகளின் படி, வாழ்க்கை அனுபவங்களை அளிக்க வல்லது. சனி பகவானை அவரது பிறந்த நாளில் வணங்கி திருப்திப் படுத்தி, அவரது கடும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் வேண்டுவது, நன்மை தரும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, உங்களுக்கு சனி தசை, சனி புக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி (ஜாதகத்தில் 8 ஆம் வீட்டில் சனி), அர்தாஷ்டம சனி (4 ஆம் வீட்டில் சனி), அல்லது ஜாதகத்தில் சனி தோஷங்கள் ஏற்பட்டிருந்தால், சனி பகவானின் பிறந்த நாளில், நிவாரண வழிபாடுகளில் கலந்து கொள்வது, இன்றியமையாததாகும்.
இந்த ஆண்டு, வான்வெளியில் சனி பகவான் சக்தி வாய்ந்த நிலையில் திகழ்வதால், அவரது பிறந்த தினம் அதிக ஆற்றல் பெறுகிறது. இதன் காரணமாக, கர்ம காரகனான இந்த கிரகத்தை திருப்திப் படுத்தி, அவரது அபாரமான ஆசீர்வாதங்களை நம்மால் எளிதில் அடைய முடியும். சனி பகவானிடமிருந்து இது போன்ற பிறந்த நாள் ஆசிகளை நீங்கள் பெறும் நோக்கத்தில், அந்த புனித நாளில், பல சக்திவாய்ந்த வழிபாடுகளை ஆஸ்ட்ரோவேத், ஏற்பாடு செய்துள்ளது.
சனி ஜெயந்தி பற்றிய தகவல் தரும் காணொளி
சனி பகவானின் பிறந்த நாள் என்பது, அவரது ஆசிகளுக்காக நன்றி தெரிவிப்பதற்கும், அவரை திருப்திப் படுத்துவதற்கும் உகந்த நாளாகும். சனி பகவானின் பிறந்த தினமான இந்த சனி ஜெயந்தி நாளில், ஆஸ்ட்ரோவேத், விசேஷ ஹோமத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், சனி பீஜ மந்திரம் 25,001 முறை ஓதப்பட்டு, சனி பகவானின் அருள் வேண்டப்படுகிறது. பொதுவாக, ஒரு தெய்வத்தின் பீஜ மந்திரம் (ஆதார ஒலி) என்பது, அபாரமான நேர்மறை ஆற்றல்களை உள்ளடக்கியது; அவரது அருளாசிகளை பெருமளவு அதிகப்படுத்தி அளிக்கும் வல்லமை வாய்ந்தது.
பீஜ மந்திரம் எனப்படும் சனி பகவானின் ஆதார ஒலிகளை அவரது பிறந்த நாள் ஹோமத்தில் ஓதுவது, அவரால் விளையும் பாதகங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும். அவரது நல்லாசிகளை அதிகமாகப் பெற்றுத் தரும். இது, கருணை, நேர்மை, கடமை உணர்வு, கட்டுபாடு, பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவும். மேலும், இந்த ஹோமம் செய்து சனி பகவானை வழிபடுவது, உங்கள் லட்சியம் நிறைவேறவும், வேலை, தொழில் முன்னேற்றம் ஏற்படவும், யதார்த்தமான, நடைமுறை சாத்தியமான வாழ்க்கை நடத்தவும் துணை புரியும்.
சனி பகவானை திருப்திப்படுத்தி, அவரது விசேஷ, பிறந்த நாள் ஆசிகளை பெறுவதற்காக, ஆஸ்ட்ரோவேத், கீழ்க்கண்ட, சக்தி வாய்ந்த சேவைகளை நடத்துகிறது:
ஆலய புராணங்களின் படி, கீழ்க்கண்ட ஆலயங்களில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, பல்வேறு நன்மைகளை அளிக்கும்:
1. திருநள்ளாறு – புராணகால அரசரான நளமகாராஜாவிற்கு, சனி பாதிப்பினால் ஏற்பட்ட தோஷம், இந்த இடத்தில் நீங்கியது என ஆலய புராணம் கூறுகிறது. எனவே இதுவே, சனி பகவானுக்கு உரிய முதன்மையான ஆலயமாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சனி வழிபாடு செய்வதால், வளமான வாழ்வு கிடைக்கும்; சனி தோஷத்தின் தீவிரம் குறையும்
2. குச்சனூர் – இந்த ஆலயத்தில், சனி பகவான் தானாக உருவான சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படுகிறார். இந்த இடத்தில் தான், இவரது பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது என்கிறது ஆலய புராணம். எனவே, சனி பகவானை இங்கு வழிபடுவதால், சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்; தொழில் வெற்றியும், குடும்ப நலனும் ஏற்படும்
3. விழுப்புரம் – சனி இங்கு, அபூர்வமான யந்திர வடிவத்தில் காட்சி தருகிறார். இது அரிதானது, அதிக சக்தி வாய்ந்தது. இதனால் இவர், ‘யந்திர சனீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். சனி பகவானை இங்கு வழிபடுவது, சனி தோஷ பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற உதவும்
4. திருநரையூர் – சனி பகவான் இங்கு, தனது தேவியருடன் இணைந்து மங்களங்களை அருளுவதால், இவர், மங்கள சனி என அழைக்கப்படுகிறார். இந்த மங்கள சனியை வழிபடுவதால், உங்களுக்கு நிறைந்த செல்வமும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும்
5. திருக்கோடிக்காவல் – இங்கு சனி, குழந்தை வடிவில் அருள் பாலிக்கிறார். ஆலய புராணங்களின் படி, இங்கு இவர், கண்களை பாதி மூடியபடி, ஒரு அசாதாரண விதத்தில் அமர்ந்து, இங்குள்ள முக்கிய கடவுளான சிவபெருமானை வணங்குகிறார். தனது கடும் பார்வையால் பலருக்கும் தண்டனை அளிக்கும் இவர், தனக்கு நேர்ந்த பாவங்களிலிருந்து, இவ்வாறு முக்தி வேண்டுகிறார். ஆகவே, சனி பகவானை இந்த ஆலயத்தில் வழிபடுவதால், அவரால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிரம் குறைந்து, நிவாரணம் கிடைக்கும்
6. திருக்கொள்ளிக்காடு – ‘பெரும் ஆசிகளை வழங்குபவர்’ என்ற பொருளில், சனி பகவான், இங்கு, பொங்கு சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தனது குருவான பைரவருக்கு எதிரே, தனி சன்னிதியில், இவர் காட்சி தருகிறார். இந்த விசேஷ ஆலயத்தில் சனியை வணங்குவதனால், அவரது நிறைந்த ஆசீர்வாதங்கள் கிடைக்கும்
7. மயிலாடுதுறை (மயூரநாதர்) – தனது சிரசில் (தலையில்) அக்னியுடன் காணப்படும் சனி பகவான், இங்கு, ஜ்வாலா சனி வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானுக்கு பூஜை செய்யும் மற்றொரு அபூர்வ உருவிலும், இவர் இங்கு காணப்படுகிறார். இந்த ஆலயத்தில் இவரை வழிபடுவதன் மூலம், சனி பாதிப்பின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ள இயலும்
8. சோழவந்தான் – சனி பகவானின் விசேஷ ஆலயங்களில் ஒன்றாக அறியப்படும் இங்கு, அவர், தானாக உருவான சுயம்புவாகத் திகழ்கிறார். இவரை பூஜிப்பதால், குழந்தை வரம் கிடைக்கும்; நஷ்டங்களிலிருந்து விடுபடலாம்; சனி பாதிப்பினால் பிரிந்து போன குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு ஏற்படும்.
சனி பகவானின் பிறந்த தினத்தன்று, சனி பீஜ மந்திரம் (ஆதார ஒலி) 25,001 முறை ஓதி, அவருக்கு நடத்தப்படும் இந்த விசேஷ ஹோமம், கருணை, நேர்மை, கடமை உணர்வு, கட்டுபாடு, பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவும்; இதன் மூலம், தனிப்பட்ட வாழ்க்கை, பணி என இரண்டிலும் உங்கள் லட்சியங்களை அடைந்து, யாதார்த்தமான வாழ்க்கை நடத்தத் துணை புரியும், என்கின்றன புனித நூல்கள்.
புராண நூல்களின் படி, ஏழைகளுக்கு உணவளிப்பது என்பது தான், தானங்களிலேயே மிகச் சிறந்தது. சனி பகவானின் பிறந்த தினத்தன்று, இவ்வாறு உணவளிப்பது, அவரது அருளாசிகளைப் பெற்றுத் தந்து, வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தரும்
எள் என்பது, சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானது. ஆலய புராணங்களின் படி, எள் தீபம் ஏற்றுவது, சனீஸ்வரரை திருப்திப்படுத்தி, அவரது தோஷ பாதிப்புகளைக் குறைக்கும்
ஆலய நடைமுறைகளின் படி, சிவலிங்கத்திற்குப் பின்புறம், ‘பின் விளக்கு’ எனப்படும் தீபம் ஏற்றுவது, எதிர்மறைகளைத் தொலைக்கவும், விருப்பங்கள் நிறைவேறவும், உதவும்

சனி பகவானின் பிறந்த நாள் என்பது, அவரது ஆசிகளுக்காக நன்றி தெரிவிப்பதற்கும், அவரை திருப்திப் படுத்துவதற்கும் உகந்த நாளாகும். சனி பகவானின் பிறந்த தினமான சனி ஜெயந்தி நாளில், கர்ம காரகரான சனி கிரகத்தை மகிழ்வித்து, அவரது அபார ஆசிகளைப் பெறுவதற்காக, ஆஸ்ட்ரோவேத், விசேஷ ஹோமத்திற்கும், பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. எங்களது இந்த சனி பிறந்த நாள் வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு, அவரது பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையின் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
பின் குறிப்பு: சனி பரிகார வழிபாடுகளுக்குப் பின்னர், நாங்கள், பிரசாதங்கள் எதையும் அனுப்புவதில்லை

நவ கிரகங்களுக்குள், அனைவரும் மிகவும் அஞ்சும் கிரகம், சனி கிரகம் தான். சனி பெயர்ச்சி, சனி தசை, சனி புக்தி காலங்களில், அவரது பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை, அவர், கடும் சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் உள்ளாக்குவார். சனி பகவான் பிறந்த நாளில் ஆஸ்ட்ரோவேத் நடத்தும் அல்டிமேட் சனி பரிகார வழிபாடுகளில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம், சனியின் தீய விளைவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்; சனி பகவானின் அருளால், வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவிற்கு, திடீரென நேரும் பெரும் பிரச்சினைகளை சாமாளிக்கும் ஆற்றல் பெறுங்கள்.
பின் குறிப்பு: சனி பரிகார வழிபாடுகளுக்குப் பின்னர், நாங்கள், பிரசாதங்கள் எதையும் அனுப்புவதில்லை