Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
பகவதி சேவா: உலக அன்னை ராஜராஜேஸ்வரி தேவிக்கு சக்திவாய்ந்த பூஜை - நேரலை: ஆகஸ்டு 16, 2019 மாலை 05:00 மணி இந்திய நேரம் - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

செழுமை, பொருளாதார மேன்மை, வளமை போன்றவற்றுக்கான வேத கால தொழில்நுட்பம்

பகவதி சேவா:
உலக அன்னை ராஜராஜேஸ்வரி தேவிக்கு சக்திவாய்ந்த பூஜை

அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் நிகழ்த்தப்படுகிறது

நேரலை: ஆகஸ்டு 16, 2019 காலை 04:30 மணி பஸிபிக் நேரம்/ காலை 07:30 மணி கிழக்கத்திய நேரம்/ மாலை 05:00 மணி இந்திய நேரம்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

அபார வளம் அருளும் அன்னையின் அருள் பெருகும் நேரம்

உலக அன்னை ராஜராஜேஸ்வரி தேவிக்கு, பகவதி சேவா என்ற, தனிச் சிறப்பும், சக்தியும் வாய்ந்த வழிபாட்டை ஆஸ்ட்ரோவேத் நடத்துகிறது. இது, அம்மன் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமான ஆடி (ஜூலை 17 – ஆகஸ்டு 16 ஆம் தேதி) மாதத்தின் ஆரம்பத்திலும், கடைசியிலும் நிகழ்த்தப்படுகிறது. ராஜராஜேஸ்வரி தேவி, அனைத்து வகை செழுமைக்கும்; வளமை, தூய்மை, மேன்மை போன்றவற்றுக்கும் காரணமான, ஆற்றல் மிகுந்த தத்துவமாக விளங்குகிறார். இந்த விசேஷ வழிபாடு, அன்னை ராஜராஜேஸ்வரியை வணங்கி, அவரது அருள் வேண்டுகிறது.

பகவதி சேவா வழிபாட்டின் தனிச் சிறப்பு

பகவதி சேவா வழிபாட்டின் தனிச் சிறப்பு

சக்தி வாய்ந்த பகவதி சேவா வழிபாட்டுச் சடங்குகள், விசேஷ பயிற்சியும், குரு உபதேசமும் பெற்றுள்ள நம்பூதிரி புரோகிதர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இந்த வழிபாட்டில், பிரபஞ்சத்தைக் குறிக்கும், பத்மம் எனப்படும் தாமரை மலரின் சித்திரம் கையால் வரையப்பட்டு, சக்தியூட்டப்படுகிறது. அதன் மேல் வைக்கபட்டுள்ள ஒரு பெரிய தீபத்தில், ராஜராஜேஸ்வரி தேவியின் தெய்வீக ஆற்றல் ஆவாஹனம் செய்யப்படுகிறது. இந்தத் தாமரை மலரின் நிறங்கள், ஐந்து இயற்கைத் தத்துவங்களான பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. இவை, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகும்.

தாமரை மலரின் நடுவில் வைக்கபட்டுள்ள தீபத்தில் தேவியை ஆவாஹனம் செய்வது என்பது, சிருஷ்டி எனப்படும் படைப்பாற்றலுக்கு நிகரானது. ஏனெனில், ஐந்து தத்துவங்களின் ஒருமைப்பாட்டை, இது குறிக்கிறது. இந்த பகவதி சேவா வழிபாட்டில், ஆழ்ந்த உள்ளர்த்தம் கொண்ட அடையாளங்களும், வழிமுறையும் பயன்படுத்தப் படுகின்றன. சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தி, நமக்குள்ளும், உலகத்திலும் அமைதியை நிலைநாட்டுவதே, இந்த வழிபாட்டின் நோக்கமாகும்.

பகவதி சேவா, கிரக தோஷங்களிலிருந்து நிவாரணம் தரும்

புராதனமான இந்த வேத வழிபாடு, கிரகங்களின் பாதிப்புகளை சமநிலைப் படுத்தி, பிரபஞ்ச சக்திகளுடன் நாம் இணக்கத்துடன் இருக்கத் துணைபுரியும். பகவதி சேவா என்பது ஒரு விசேஷ பரிகாரமாகத் திகழ்கிறது. இது, சந்திரன், செவ்வாய், சுக்கிரன், ராகு போன்ற கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைப் போக்க வல்லது. இந்த ஒவ்வொரு கிரகமும், இறைவியின் ஆற்றலுடன், ஒரு குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டுள்ளன. பகவதி சேவா நடத்துவதின் மூலம், இந்த கிரங்களை திருப்தி அடையச் செய்ய முடியும்.

மனதை ஆட்சி செய்யும் சந்திரன்; சொத்துக்களைக் குறிக்கும் கிரகமான செவ்வாய்; அழகின் கிரகமான சுக்கிரன்; உலக ஆசைகளைக் குறிக்கும் ராகு போன்றவை எல்லாம், இந்த இறை ஆற்றலின் பல்வேறு வடிவங்களால் ஆளப்படுகின்றன. பகவதி சேவா பூஜை, இந்த கிரகங்களின் நேர்மறை அம்சங்களையும் மேம்படுத்தக் கூடியதாகும்.

Bhagavati Seva Rituals

  • பார்வதி தேவியால் ஆட்சி செய்யப்படும் சந்திரன், அறிவாற்றல், நல்லுறவு, ஞானம் போன்றவற்றை அளிக்கக் கூடியவர்
  • செவ்வாய் கிரகத்தின் தாயாகிய பூமி தேவி, பொருளாதார வசதிகளை அருளி, உங்களை குணப்படுத்தக் கூடியவர்
  • அன்னை துர்கையால் ஆளப்படும் ராகு, உங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கும் எதிர்மறைகள் அனைத்தையும் அழிக்கக் கூடியவர்
  • லக்ஷ்மி தேவியால் ஆட்சி செய்யப்படும் சுக்கிரன், அழகு, தூய்மை, பெருந்தன்மை, வளமை போன்றவற்றை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்

சிறப்பு கூட்டு பகவதி சேவா பூஜையின் நற்பலன்கள்

பண்டைய வேத வழிபாடான பகவதி சேவா, தூய்மைப்படுத்தும் வழிபாடாக விளங்குகிறது. இது, பிரபஞ்ச சக்திகளுடன் நீங்கள் இணக்கமாக இருக்க உதவுகிறது. உலக அன்னை ராஜராஜேஸ்வரி தேவியின் கீழ்க்கண்ட ஆசிகள், உங்களுக்குக் கிடைக்கும்:

  • நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் மற்றும் சந்தோஷம்
  • பொருட்செல்வம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள்
  • கிரகங்களால் ஏற்படும் தீய விளைவுகள் நீங்குதல்
  • துன்பத்திலிருந்து விடுதலை; அமைதி, சமநிலை கிடைத்தல்
  • குழந்தை வரம் குறித்த கனவு நிறைவேறுதல்
  • தடைகளைக் கடந்து, வெற்றிகளை அடைதல்
  • நேர்மறை ஆற்றல்களை மேம்படுத்தி, ஆன்மீக முன்னேற்றம் பெறுதல்

இரண்டு பகவதி சேவா வழிபாடுகள் – ஆடி மாதத் தொடக்கத்திலும், முடிவிலும்

  • சிறப்பு கூட்டு பகவதி சேவா பூஜை, ஆகஸ்டு 16, 2019 (இந்திய நேரம்)
  • ரக்த புஷ்பாஞ்சலி, ஆகஸ்டு 16, 2019 (இந்திய நேரம்)
  • இறைவிக்கு நெய் பாயசம் நைவேத்தியம் செய்தல், ஆகஸ்டு 16, 2019 (இந்திய நேரம்)

இரண்டு பகவதி சேவா வழிபாடுகள்

பகவதி சேவா என்பது தனிச்சிறப்பும், சக்தியும் வாய்ந்த பூஜையாகும். பெரும் கடவுளாக விளங்கும் அன்னை ராஜராஜேஸ்வரி வடிவில் இருக்கும் பாதுகாப்பு ஆற்றல்களை வேண்டிப் பெறும் இந்த வழிபாடு, ஆடி மாதத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் நடத்தப்படுகிறது. ராஜராஜேஸ்வரி தேவியை வணங்கி வழிபடும் இந்த பகவதி சேவா பூஜைகளில் பங்கெடுத்துக் கொள்வது, அன்னை ராஜராஜேஸ்வரியின் அருளால், வாழ்க்கையில் வளமை, செழுமை, தூய்மை, பெரும் செல்வம் ஆகியவற்றை அடைய உதவும்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பிரத்யேகமான பகவதி சேவா, கேரள ஆலயத்தில்

பிரத்யேகமான பகவதி சேவா, கேரள ஆலயத்தில்

பிரத்யேகமான பகவதி சேவா வழிபாட்டிற்கு நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டில், உங்களைத் தவிர உங்கள் குடும்பத்தினர் 3 பேர்களுக்கும் அனுமதி உண்டு. எனவே, அவர்களின் பெயர், ஜன்ம நட்சத்திரம் ஆகியவற்றை அனுப்பி, நீங்கள் இதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த விசேஷ பூஜை, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் போன்றவற்றுக்கான ராஜராஜேஸ்வரி தேவியின் அருளை வேண்டிப் பெறுகிறது. இந்த புனித வழிபாட்டில் பங்கு கொண்டு, துன்பத்திலிருந்து நிவாரணமும், வாழ்க்கையில் அமைதியும், சமநிலையும் பெறுங்கள். இந்த பூஜைகள், கேரளாவைச் சேர்ந்த தேர்ச்சி பெற்ற நம்பூதிரி புரோகிதர்களால் நடத்தப்படுவதால், இதற்கு, குறைந்த, குறிப்பிட்ட அளவிலான பதிவுகளையே நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.