Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வெற்றிகள் கிடைக்க அஷ்டமி பரிகாரம
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வெற்றிகள் கிடைக்க அஷ்டமி பரிகாரம

Posted DateJanuary 3, 2025

பைரவர் என்று சொன்னாலே நமது மனதில் தைரியம் கூடும். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்ய சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில்  இருந்து அவதரித்தவர். இவரை கால பைரவர் என்று அழைப்பார்கள். இவருக்கு  எட்டு திருக்கோலங்கள் உண்டு. அவர்களை அஷ்ட பைரவர் என்று அழைப்பார்கள். அவர்கள் முறையே  அசிதாங்க பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், ருரு பைரவர், கால பைரவர்,  சண்ட பைரவர்,  பீஷன பைரவர்,  சம்ஹார பைரவர் ஆகியோர்கள் ஆவர். காசியின் எட்டு திக்கிலும் இவர்கள் காவல் புரிந்து கொண்டிருப்பதால் காசி க்ஷேத்திரம் பைரவ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும்  கால பைரவரை நாம் காணலாம். இவர் திகம்பர கோலத்தில் இருப்பார். அதாவது  ஆடையில்லாத நிலையில் இருப்பார். இவரை தினமும் வணங்கலாம்.

என்றாலும்  ஞாயிறு,  செவ்வாய்,   வெள்ளி ஆகிய கிழமைகள் இவரை வணங்க  உகந்த கிழமைகள் ஆகும்.  பரணி நட்சத்திர நாளில் இவரை வணங்கலாம். பெளர்ணமி அமாவாசை நாட்களில் இவரை வணங்கலாம். இவரை வணங்க அதி விசேஷமான நாளாக  தேய்பிறை அஷ்டமி கூறப்படுகிறது. அன்றைய தினம் இரவில், அல்லது உச்சிப் பொழுதில் வணங்கலாம். குறிப்பாக  ராகு காலத்தில் அதுவும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் இவருக்கு உகந்த நேரம் .  தாமரை வில்வம், தும்பைப் பூ மற்றும் தும்பைப் பூ, சிகப்பு நிற மலர்கள் இவருக்கு உகந்த மலர்கள். குறிப்பாக செவ்வரளி பூ இவருக்கு உகந்த பூ ஆகும்.  சந்தன அபிஷகம், மிளகு வடை மாலை,  வெல்லம் கலந்த சர்கரைப் பொங்கல், மற்றும் தேன் இவருக்கு உகந்த பொருட்கள் ஆகும்.

பைரவர் வழிபாடு :

நாம் வாழ்வில் வெற்றி பெற முதலில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து வெளி வர வேண்டும். நமது துன்பங்கள் நீங்க வேண்டும். அதுவே நாம் பாதி வெற்றியைக் கண்டது போல. நமது முயற்சி என்பதும்   கண்டிப்பாக இருக்க வேண்டும். முதலும் முடிவுமாக இறை அருள் என்பது அவசியம். நமது அனைத்து பிரச்சினைகளும் தீர நாம் கால பைரவரை வணங்க வேண்டும். தேயக் கூடிய பிரச்சினைகள் தீர கால பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட வேண்டும். காலையில் எழுந்து நீராடி வீட்டில் இருக்கும் பைரவர் படம் அல்லது சிவபெருமான் திருவுருவப் படத்திற்கு மலர்களை சூட்டி உபவாச விரதம் இருந்து வழிபட வேண்டும். முக்கியமாக இரவு உணவை தவிர்க்க வேண்டும். பைரவர் அஷ்டோத்தரத்தை பாராயணம் செய்ய வேண்டும். பைரவர் காயத்திரி ஜெபிக்கலாம்.  பொதுவாக நூற்றி எட்டு  முறை ஜெபித்து வழிபடலாம் மேலும் பைரவருக்கு ஒன்பது அல்லது பதினொன்று என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். அல்லது மிளகை மூட்டையாகக்  கட்டி அதனை திரியாக வைத்து ஏற்றி வழிபட வேண்டும்.

வழிபாட்டுப் பலன்கள்

இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும். வராத கடன் வசூலாகும். நீங்கள் அளிக்க வேண்டிய கடனை அடைத்து முடிப்பீர்கள். நோய்கள் தீரும். வலி மற்றும் பிரச்சினைகள் தீரும். ஏழரை சனி கண்ட சனி அஷ்டம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். தொழிலில் இருந்து வந்த நஷ்டங்கள் நீங்கும். அரசியலில் வெற்றி கிட்டும். பணம் சார்ந்த விஷயங்களில் வெற்றி கிட்டும். கடன் தீரும் வழக்குகளில் வெற்றி கிட்டும்.பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றில் இருந்து வெளி வரலாம். வாழ்வில் பாதுகாப்பு கிட்டும். குழந்தை வரம் கிட்டும்.