சோமாசிமாற நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவராயிருந்தார். பல தான தருமங்களை சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார். அவர் தனது எளிமை, பெருந்தன்மை மற்றும் கருணை மூலம் மற்றவர்களை ஈர்த்தார்.
அவர் சிவபெருமானின் சிறந்த பக்தராக இருந்தார், மேலும் பூஜைகள், சோம-யாகங்கள் நடத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் அவர் சோமாசி மாற நாயனார் என்று அழைக்கப்பட்டார். சாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவர், சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் அவர்களின் சாதி, சமூகம் என்ற பேதமின்றி உணவு பரிமாறினார். இவருடைய காலத்தில் சிவனின் பஞ்சாக்ஷர மந்திரத்தை பல லட்சம் நேரம் ஜபித்தார்.
இவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தவர். அவர் மனதில் ‘சோம யாகம் செய்யவேண்டும்’ என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை ஈசனே வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.
சுந்தரர், திருவாரூர் தியாகராயப் பெருமானிடம் நட்பு பாராட்டி பழகுபவர் என்பதைச் சோமாசி அறிவார். அவரது அருளைப் பெற்றால் ஈசனை அணுகமுடியும் என்ற எண்ணத்தில், சுந்தரரின் நட்பைப் பெற முயன்றார்.
திருவாரூர் சென்று சுந்தரரை சந்தித்தார். அவர் சுந்தரரின் சீடராகி அவருக்கு உரிய முறையில் சேவை செய்தார். சுந்தரர் மீது அவர் செய்த உண்மையான சேவையால், அவர் சிவபெருமானின் அருளைப் பெற்றார்.

தன்னைப் பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மனம் இளகிய சுந்தரர், “தாங்கள் வேண்டுவது என்ன?” என்று கேட்டார். சோமாசி மாற நாயனாரும் ‘தான் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை அந்த ஈசனே வந்து பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும்’ என்று தன் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலை மனக்கண்ணில் கண்ட சுந்தரரும், ” அவ்வாறே நடைபெறும் ” என்று உறுதியளித்தார். வேள்வி செய்யும் நாளும் வந்தது. யாருமே செய்யாத அளவில் இந்த யாகம் செய்யப் போகிறோம் என்ற உற்சாகம் சோமாசி மாற நாயனாருக்கு இருந்தது. அதனால் அவர் ஊன் உறக்கம் இல்லாமல் இருந்தார்.
யாகம் நடைபெறும் நாளும் வந்தது. அன்றைய தினம் பலரும் அந்த யாகத்தில் கலந்து கொண்டனர். யாகம் நிறைவுபெறும் தறுவாய். அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டும். எல்லோரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது, பறை ஒலிக்கிற சத்தம் கேட்டது. எல்லோரும் தெருவில் சென்று பார்த்தபோது, பறை ஒலியும், எக்காளமும் முழங்க வந்த அந்தக்கூட்டத்தின் நடுவே, திடகாத்திரமான ஒரு இளைஞன் தென்பட்டான். வெட்டியான் கோலத்தில் இருந்த அந்த இளைஞன், தன்னுடைய தோளில் இறந்துபோன கன்றினை சுமந்திருந்தான். அவனது இடுப்பு பகுதியில் பறையும், ஒரு கரத்தில் குச்சியும், மறு கரத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட 4 நாய்களையும் இழுத்துக்கொண்டு வருகிறார். அவருடன் அவர் மனைவியும் வருகிறாள். அவள் தலையில் மதுக்குடம் ஒன்றைச் சுமந்திருந்தாள். அதோடு, தன் முதுகில் இருபிள்ளைகளையும் கட்டிக்கொண்டுள்ளாள். நாய்கள் முன்னோக்கி ஓட, அதைப் பற்றியவாறே அந்த வேடன் ஓடி வருகிறார். சோமாசி மாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடினர். ஆனால் சோமாசி மாற நாயனாரோ, அதை அறிந்திருந்தார்.
ஆனால் சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் ‘விநாயகனும் முருகனும்’ என்றும் தெளிந்தார்.
அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் போனார். அவரை நோக்கி நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் எல்லாம், ‘என்ன பைத்தியக்காரத்தனம். பரமனுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை இந்தப் பாவிக்குத் தருகிறாரே?’ என்று வைதனர். ஆனால் சோமாசியோ பக்தியோடு பணிந்துகொண்டு அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் தந்தார். வேடன் அந்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும், விநாயகர் மற்றும் முருகப் பெருமானோடும் காட்சி கொடுத்தார் ஈசன். அந்தக் காட்சியை அந்த ஊரே கண்டு மகிழ்ந்தது. சோமாசிக்குக் காட்சிகொடுத்ததால் அவருக்கு ,’காட்சிகொடுத்த நாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று.
இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமாளம். திருவாரூருக்கு அருகில் இருக்கிறது இந்த ஊர். இங்கு ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
அவர் இறந்த பிறகு, அவர் சிவனின் இருப்பிடமான கைலாசத்தை அடைந்தார். இவர் தமிழ் மாதம் வைகாசியில் சிவன் கோவில்களில் சிறப்பாக வழிபடப்படுகிறார் மேலும் சிவன் கோவில்களில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவராகவும் வழிபடப்படுகிறார்.
April 2, 2026
March 28, 2026
March 25, 2026