இது கடலில் விளையும் இரத்தினம் ஆகும். இது இயற்கை ரத்தினம் வகையில் சேர்ந்தது ஆகும். முத்து ஒளி பொருந்திய உருண்டை வடிவம் கொண்டது. சிப்பிக்குள் உருவாகும் பொருள். இது வெண்மை நிறம் கொண்டது. சிப்பியின் உட்புறம் செல்லும் அன்னியப் பொருளே முத்தாக மாறுகிறது. அவ்வாறு செல்லும் அன்னியப் பொருள் சிப்பியை உறுத்துவதாகவும் அதனால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக மாறுகிறது என்றும் கூறுவார்கள். கடல் நீர் மற்றும் நல்ல நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும். உருண்டை வடிவ முத்துக்களே சிறப்பானவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள்
இது சந்திரனின் சக்தியை அகர்ஷிக்கும் இரத்தினம் ஆகும். இதன் ரசாயன பார்முலா CaCo31 C3H18N9N9O11nH2O இதன் கடினத் தன்மை 3 அடர்த்தி எண்2.71 ஒளி விலகல் எண் 1.53-1.68முத்துக்கள் வெண்மை, கருமை, பால் நிறம் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. சிவப்பு, மஞ்சள், கருப்பு நிறம் உள்ள முத்துக்கள் கூட விளைவதுண்டு.
உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன்படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.
இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இயற்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரத்திகளாக இருப்பது நல்லது.7, 8 ரத்திகள் கூடாது. முத்தை வெள்ளியில் கோர்த்தும் அணியலாம்.
முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும். முத்து சந்திரனால் ஆளப்படும் இரத்தினக் கல். சந்திரன் சுபவீட்டில் நின்றால் அலது சுப வீட்டு அதிபதியாக இருந்தால் முத்து அணியலாம்.
முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும். முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது. முத்து மணியானது உஷ்ண சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. சுவாசக் கோளாறு, மனவளர்ச்சியின்மை, தொண்டை சம்பந்தமான கோளாறுகள், தலைவலி, தூக்கமின்மை, மனநோய், ஹிஸ்டீரியா , காக்கை வலிப்பு, சளி, இருமல், போன்றவற்றை தீர்க்கும். மேலும் ஜலதோஷம், பக்கவாதம், பாரிச வாயு, மூத்திரப் பை எரிச்சல், பெண்களின் மாத விலக்கு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது. டைகர்ஸ் ஐ எனப்படும் கல்லையும் முத்துக்கு மாற்றுக்கல்லாக அணியலாம்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025