மனித வாழ்வில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள பணத்தை நம்புகிறோம். ஆனால் எப்போதும் ஒவ்வொருவரும் தேவையான பணத்தை உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அத்தகைய சூழ்நிலையில் “கடன்” எனும் நடைமுறை உருவாகிறது. கடன் என்பதில் இருவர் அடங்குவார்கள். ஒன்று கடன் வாங்குபவர். மற்றொருவர் கடன் கொடுப்பவர். கடன் கொடுப்பது என்பது உதவிகரமான செயல் என்றாலும், அதனுடன் பல சிக்கல்கள் தொடர்புபட்டுள்ளன.
கடன் கொடுப்பதின் முதன்மை நோக்கம், ஒருவர் பொருளாதார சிக்கலில் சிக்கும்போது அவருக்கு உதவி செய்வதுதான். இது தனிநபர்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்களிலும், வங்கிகளிலும் நடக்கும். நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயலார் என பல்வேறு உறவுகளும் இதில் ஈடுபடுகிறார்கள். ஆனால், உதவிக்கரம் நீட்டுவது நல்லது என்றாலும், அதை சரியான முறையில் செய்வது அவசியம்.
கடன் கொடுப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அதை திரும்பப் பெறுவது பெரும்பாலும் சிரமமானதாகிவிடுகிறது. காரணங்கள் பலவாக இருக்கலாம். கடன் வாங்கியவரின் பொருளாதார நிலைமை – எதிர்பாராத சூழ்நிலைகள், வேலை இழப்பு அல்லது வியாபார நஷ்டம் போன்றவை திருப்பிச் செலுத்துவதை கடினமாக்கும். மனப்பான்மை மற்றும் நம்பிக்கை பிரச்சினைகள் – சிலர் திட்டமிட்டே திருப்பித் தராமல் தவிர்க்க முயல்வார்கள். உறவுச் சிக்கல்கள் – நண்பர்கள் அல்லது உறவினர்களிடையே பணம் தொடர்பான பிரச்சினைகள் பிளவை ஏற்படுத்தும்.
சிறு தொகை என்றால் நம்பிக்கையின் அடிப்படையில் தந்து விடலாம். ஆனால் பெரிய தொகை அளிக்கும் பொழுது எழுத்துப் பத்திரம் வைத்துக்கொள்ளுதல் அவசியம். வாக்குறுதி மட்டுமின்றி, கடன் விவரங்களை எழுத்து மூலம் பதிவு செய்தால் சட்டரீதியாக பாதுகாப்பு கிடைக்கும். திருப்பிச் செலுத்தும் காலவரை குறிப்பிடுதல் – தெளிவான கால எல்லை இருந்தால் சிக்கல்கள் குறையும். தனிநபர் தன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு மட்டுமே கொடுக்க வேண்டும். வட்டி மற்றும் நிபந்தனைகள் – தேவைக்கு ஏற்ப சரியான வட்டி மற்றும் நிபந்தனைகளை முன்பே குறிப்பிடுவது நல்லது.
கடன் என்பது நம்பிக்கை மீது அமைந்த உறவாகும். ஒருவருக்கு உதவி செய்வது மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாத பழக்கம் சமூக நெறிகளையும், நம்பிக்கையையும் பாதிக்கும். இதனால் உறவுகள் முறிவடைய வாய்ப்புள்ளது. கடன் கொடுப்பதும், அதனை திரும்பப் பெறுவதும் எளிதான விஷயம் அல்ல. நம்பிக்கையும் நேர்மையும் இந்த நடைமுறையின் தூண்கள். அதனால்தான் பழமொழி ஒன்று கூறுகிறது: “கடன் கொடுக்க வேண்டாம், கொடுத்தால் கையில் பத்திரம் வைத்துக்கொள்.”இது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி உறவுகளைக் காக்கவும் தேவையான அறிவுரையாகும். ஒவ்வொருவரும் தனது வரம்பிற்குள் உதவி செய்து, நேர்மையுடன் கடன் திருப்பிச் செலுத்தும் பழக்கத்தை வளர்த்தால் சமூகத்தில் நம்பிக்கை நிலைக்கும்.
கொடுத்த பணம் நீண்ட நாட்களாகியும் திரும்ப வரவில்லை என்று சங்கடப் படுபவர்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இந்தப் பரிகாரம். நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்களுக்குத் திரும்ப கிடைக்க வேண்டுமா? இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள்.
பரிகாரம் என்பது நியாயமான கடனைத் திரும்ப பெற மட்டும் செய்யப்பட வேண்டும். தவறான நோக்கம் இருந்தால் பலன் கிடைக்காது. மேலும் பரிகாரம் மட்டும் போதாது. பெரிய தொகை என்றால் இதற்குப் பக்கத்துணையாக , சட்ட வழி, முறையான பேச்சுவார்த்தை முயற்சிகளும் அவசியம்.
இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை செய்ய வேண்டும். ஒரு பச்சை எலுமிச்சை வாங்கிக் கொள்ளுங்கள். முடிந்த வரை அதில் புள்ளிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அன்று சிவாலயம் சென்று அந்த எலுமிச்சையை சிவன் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு பாதத்தில் வைக்கும் போது நமசிவாய என்று 21 முறை கூறுங்கள். அதனை பிரசாதமாகப் பெற்று வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் வீட்டில் வடக்கு தசையில் பணப் பெட்டகத்தை வைத்து அந்த எலுமிச்சையை அந்தப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் திரும்பக் கிடைத்ததும் அந்த எலுமிச்சையை கால்வாய் அல்லது ஓடும் நீரில் விடுங்கள். ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவன் திருவுருவப் படத்திற்கு முன் வைத்து அதே முறையைப் பின்பற்றுங்கள்.
April 23, 2026