உலகத்தில் நூற்றுக்கணக்கான கற்கள் இருந்தாலும் அவற்றில் சில வகைக் கற்களே மக்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என ஆன்றோர்கள் கண்டு அறிந்துள்ளனர். இவைகள் தான் மிக ஆற்றல் கொண்ட கற்கள் ஆகும். மேலும் நல்ல அதிர்வுகளைக் கொண்டது. இது வரையிலும் வகை வகையான கற்களை மனிதர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த இரத்தினங்களில் நவ இரத்தினங்களும் அடங்கும். நவ இரத்தினங்களை விலை உயர்ந்த கற்கள் என்றும் மற்ற வகைக் கற்களை உப இரத்தினங்கள என்றும் பிரித்துள்ளனர். அதிர்ஷ்டத்தை மேன்மேலும் பெருகச் செய்யும் ஆற்றல் மிக்கவை நவரத்தினங்கள் ஆகும். நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆற்றல் உண்டு. அவற்றில் தங்கள் பிறந்த எண்ணுக்கேற்ற அதிர்ஷ்டக்கல்லை வாங்கி, தங்கள் உடலில் படிம்படி அணிந்துகொண்டால்,அந்தக் கற்களின் ஆற்றல் உடலில் பாய்ந்து, உடல் நலக் குறைபாடுகளைப் போக்குவதோடன்றி, அதிர்ஷ்டகரமான வாழ்வையும் அள்ளித் தருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நவரத்தினன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
April 23, 2026