Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027

Posted DateJuly 15, 2024

கடக ராசி சனி பெயர்ச்சி 2025 பொதுப்பலன்

கடக ராசி அன்பர்களே!  மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 9ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.

​இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் உங்களுக்கு அனுகூலமான மாற்றங்கள் இருக்கலாம். நீங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையைக் காணலாம். இதுநாள் வரை நீங்கள் சந்தித்து வந்த இழப்புகளில் இருந்து மீண்டு வருவீர்கள். தடைகளை தகர்த்து எறிவீர்கள். போராட்டங்கள் மற்றும் எதிர்பாராத இழப்புகளுக்கு ஒரு முடிவை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் வசதியாக உணரலாம் மற்றும் ஆன்மீக ஈடுபாடு கொள்ளலாம்.

உத்தியோகம் :

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். உத்தியோகத்தின் மூலம் ஆதாயம் பெற தாமதங்கள் இருக்கலாம் என்றாலும் நீங்கள் நீடித்த ஆதாயம் பெறலாம். முந்தைய போராட்டங்களில் இருந்து மீண்டு  வருவீர்கள். என்றாலும் சில சிறிய சவால்களை நீங்கள் சந்திக்க நேரலாம். எனவே திட்டமிட்டு செயல்படுங்கள். அதன் மூலம் நேர்மறையான முன்னேற்றத்தை நீங்கள் காணலாம்.  உங்கள் அன்றாட பணிகள், மற்றும் பொறுப்புகளை நீங்கள் சரிவர நிறைவேற்றலாம். உங்கள் பலவீனங்களை அறிந்து நடந்து கொள்வதன் மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.  இந்த  அணுகுமுறை மற்றும்  சனியின் சாதகமான தாக்கம்  இணைந்து, உங்கள் உத்தியோக வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தக்கூடும்.

 காதல் / குடும்ப உறவு :

உங்கள் துணையின் கருத்துக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கலாம். அதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வு அதிகரிக்கலாம். இது கருத்து வேறுபாடுகளைக் களைய உதவும். ஒளிவு மறைவின்றி கருத்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன் மூலம் உறவில் பிணைப்பு மேம்படும். உங்கள் காதலுக்கு பிறரின் ஆதரவு இருக்கலாம். தந்தையின் ஆதரவு தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் கோரிக்கையை நேரடியாக தெரிவிக்கலாம். உறவில் பொறுமை மற்றும் புரிதல் அவசியம். இளம் வயதினர் மனதில் புதிய காதல் மலரலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் உறுதியான தொடர்புகளை உருவாக்குவதற்கு வெளிப்படையான  தொடர்பு  மற்றும் நேர்மறையான மனநிலை ஆகியவை அவசியம்.

திருமண வாழ்க்கை :- 

கணவன் மனைவி உறவில் ஒளிவு மறைவற்ற தன்மை அவசியம். இது புரிந்துணர்வை வளர்க்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்துகளை நீங்கள் கவனமுடன் கேட்கலாம். அவர்களின் கண்ணோட்டத்தில் விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். மேலும் அவருடன் உங்கள் தரமான நேரத்தை ஒதுக்கி செலவழிக்கலாம். இது உறவுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும். மேலும், நம்பிக்கை, மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் தனித்தன்மை வாய்ந்த குணங்களுக்கு பாராட்டுகளை சொல்வதில்  கவனம் செலுத்துவதன் மூலம்  உறவின்  உண்மையான அர்த்தத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.

நிதிநிலை:-

ஸ்திரமான நிதிநிலை காண வரவு செலவுகளை பட்ஜெட் அமைத்து செயல்படுத்தவும். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் ஆராய்ந்து செயல்படவும். முதலீடு விஷயத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும். ஒரே திட்டத்தில்  முதலீடு செய்யாமல் பல்வேறு திட்டங்களில் முதலீடுகளை பரப்பவும். கடன் வாங்குவதைத் தவிருங்கள். அவசியம் தேவை என்றால் உங்கள் திருப்பிச் செலுத்தும் தகுதி அறிந்து அதற்கேற்ப கடன் வாங்குவது நல்லது. எனவே கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய சந்தை நிலவரம் அறிந்து கொள்ளுங்கள். அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விவேகமான  முடிவுகளை எடுப்பது உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம். உங்கள் நிதி எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் :-

மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் படிப்பில் வெற்றி காணலாம்.  அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை மேம்படும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். நல்ல மதிப்பெண்களை இலக்காகக் கொண்டு செயல்படுங்கள். ஆழ்ந்த ஈடுபாடு நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பயனளிக்கும். புதிய விஷயங்களை திறன்களைக் கற்றுக்கொள்ள இந்த நேரம் சரியானதாகத் தெரிகிறது. உங்களின் தனித்துவமான எண்ணங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் யோசனைகள் மற்றவர்களை ஈர்க்கக்கூடும். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள். உங்கள் திறமைகள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும். நேர்மறையான அணுகுமுறையைப் பேணுவதன் மூலம் உங்கள் கல்வி முயற்சிகளில் புதிய உயரங்களை அடையலாம்.

ஆரோக்கியம் :-

உங்கள்  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிய உடல் உபாதைகள் என்றாலும் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய முயலுங்கள். தேவைப்படும்  மருத்துவ பரிசோதனைகள், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் சீரான வாழ்க்கை முறை ஆகியவை உடல்நல உபாதைகளைக் கணிசமாகக் குறைக்கும். மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். எனவே மன அழுத்தம் இன்றி இருங்கள். அதற்கு யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க சிறந்த உணவுத் திட்டத்தைத் தேர்வு செய்யவும். சரியான உடல் செயல்பாட்டிற்கு தண்ணீர் அவசியம்; தேவைப்படும் தண்ணீரை அருந்துங்கள்.

பரிகாரங்கள் :-

  1. சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.
  2. ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும்.
  3. சனிக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் செய்யுங்கள்.
  4. சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.
  5. நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுங்கள்.
  6. முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.