Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
புரட்டாசி மாதம் - ஏன் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

புரட்டாசி மாதம் – ஏன் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது?

Posted DateSeptember 4, 2024

ஒவ்வொரு தமிழ் மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் அதற்கென்று தனி முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஆனால் மற்ற மாதங்களை ஒப்பிடும் போது புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி 6 வது தமிழ் மாதமாகும்.  இது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வருகிறது. இந்த மாதத்தில் ஒரு முக்கியமான தெய்வீக நிகழ்வு நடந்ததாகவும், அதனால், அந்த மாதம் மிகவும் புனிதமானதாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு சமயம், புரட்டாசி மாதத்தில், விஷ்ணு பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரராக (செல்வத்தின் அதிபதியாக விளங்கும் ஏழுமலையான் ) மனித வடிவில் பூமியில் அவதரித்தார், அன்றிலிருந்து புரட்டாசி மாதம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கடவுள் வெங்கடேஸ்வரர் கலியுகத்தின் பாதுகாவலராக இருக்கிறார்.  மேலும் அவரை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு செல்வம், நல்வாழ்வு, செழிப்பு, இன்பங்கள் மற்றும் லௌகீக மற்றும் ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பொழிகிறார்.

புனித நூல்களின்படி, புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலம் சனி கிரகத்தின் தீய / பாதகமான தாக்கத்தின் விளைவுகள் குறையும். எனவே, விஷ்ணு மற்றும் சனி (சனி) இருவரையும் சாந்தப்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வளமான வாழ்க்கைக்காகவும் இது ஒரு சிறந்த காலமாகும்.

மாவிளக்கு

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவது  தமிழர்கள் பின்பற்றும் முக்கிய வழக்கங்களில் ஒன்றாகும். இந்த சடங்கின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், வெங்கடேசப் பெருமான் தனது பக்தர்கள்  தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், இது அனைவருக்கும் சாத்தியமில்லை. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், மலை ஏற முடியாதவர்கள்  தங்கள் வீட்டில் மாவிளக்கு ஏற்றி, ‘கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்து விஷ்ணுவை வழிபடலாம். மாவிளக்கு ஒளியின் மூலம் இறைவன் அருள்புரிவதாக நம்பப்படுகிறது. அறிவியல் பூர்வமாக அரிசி மாவு மற்றும் பசு நெய் கலவையின் மூலம் வெளிப்படும் கார்பன் வீட்டில் உள்ள அனைத்து தீய கதிர்வீச்சுகளையும் அழிக்கும்.

தர்ப்பணம்

புரட்டாசி மாதம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  வழங்குவதற்கான உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து அமாவாசைக்கு முதல் 15 நாட்கள் இங்கு தங்கியிருப்பதால், அந்த 15 நாட்களும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அல்லது பிரசாதம் கொடுப்பதற்கு உகந்தது என்று நம்பப்படுகிறது. இந்த சடங்குகளை செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை இருமுறை பெறுவோம்