உலகெங்கிலும் பக்தர்களை கொண்ட தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் தைப்பூசம் இந்த வருடம் பிப்ரவரி 11ஆம் தேதி அமைந்திருக்கிறது. இதையொட்டி முருகப்பெருமானின் அருளைப் பெற கடைபிடிக்க வேண்டிய 21 நாள் விரத முறை பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும், அன்று செய்ய வேண்டிய தானம் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வருடம் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தைப்பூசத் திரு விழா விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. பொதுவாக முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் கடைபிடித்தால் பல நன்மைகளை பெறலாம் என்பது நம்பிக்கை. ஒளி மயமான வாழ்க்கை வேண்டும் என விரும்பும் பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் முருகன் நாம் வேண்டியதை நமக்கு அருள்புரிவார். முருகப் பெருமானின் அருளால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
முருகனுக்கு விசேஷமான நாட்கள் – செவ்வாய், வியாழன், ஞாயிறு. திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு விரதம் தொடங்கிட தனித்தனி நாட்கள் உண்டு. உதாரணமாக திருணமத்திற்காக விரதம் கடைபிடிப்போர் ஞாயிற்றுக்கிழமை விரதத்தை தொடங்கலாம். திதி நாள் கணக்கு வைத்து விரதம் தொடங்க நினைக்கும் பக்தர்கள் சஷ்டி திதியில் ஆரம்பிப்பது சிறப்பு. கார்த்திகை நட்சத்திரத்தன்றும் விரதம் தொடங்கலாம். முருகப்பெருமானுக்கு விசேஷமான எந்த நாளிலும் நீங்கள் விரதம் தொடங்கலாம்.
21 நாட்கள் முருகனுக்கு விரத முறை
விரதம் தொடங்கும் நாளில் வீட்டின் அருகே உள்ள முருகர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு கையில் காப்பு கட்டி கொள்ளவும்.வீட்டில் முருகர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அரளிப்பூ, மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லி பூ கொண்டு அர்ச்சனை செய்யவும்.முருனுக்கு நெய்வேத்தியமாக காய்ச்சிய பாலில் தேன் கலந்து வைக்கவும். வழிபாடு முடிந்த பிறகு நீங்கள் இதை பிரசாதமாக எடுத்துக் கொள்ளவும்.
21 நாட்களுக்கும் பட்டினியாக இருந்து விரதம் கடைபிடிப்பது சிரமமான காரியம். எனவே தினமும் ஒரு வேளை பட்டினியாக இருங்கள். அசைவ உணவுகளை விரத காலத்தில் கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.காலை, மாலை என இரண்டு நேரங்களுக்கு குளிக்க வேண்டும்.காலையில் முருகர் படம் முன்பு அமர்ந்து என்ன தேவைக்காக விரதம் இருக்கிறீர்களோ அதை வேண்டிக் கொள்ளவும்.மாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அப்போது தொழில் வளர்ச்சிக்காக விரதம் இருந்தால் வேல் மாறல் படிக்கவும். இந்த 21 நாட்களிலும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்தி விரதம் கடைபிடித்தால் முருகப்பெருமானின் அருளைப் பெற்று மன நிம்மதியோடு வாழலாம்
இந்த தைப்பூச திருநாளில் அன்னதானம் செய்வது மிகச் சிறப்பான பலனை கொடுக்கும். நீங்களும் உங்களால் இயன்ற அன்னதானத்தை பக்தர்களுக்காக கொடுக்க வேண்டும். தீராத கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள், தைப்பூசத் திருநாள் அன்று எந்த பொருளை பக்தர்களுக்கு அன்னதானமாக கொடுத்தால், கடன் சுமையிலிருந்து விடுபடலாம் என்று காணலாம்.
தைப்பூசம் அன்று செய்ய வேண்டிய தானம் – முருகனுக்கு உகந்த தானம் என்றால் அது மலைத்தேன். சுத்தமான தேன் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமாக காய்ச்சிய பாலில் தேவைக்கு ஏற்ப தேன், வாசனைக்காக ஏலக்காய் போட்டு, நன்றாக கலந்து இதை முருகன் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். குருக்களிடம் இந்த பிரசாதத்தை கொடுத்து முருகனுக்கு நெய்வேதியம் செய்து வாங்கிக் கொள்ளவும். பிறகு சின்ன சின்ன டம்ளரில் இந்த பாலை ஊற்றி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்தாலும் சரி, அந்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு போய் வீதியில் இருப்பவர்களுக்கும் இந்த பாலை தானமாக உங்களுடைய கையாலே கொடுக்கும் போது, கடன் சார்ந்த பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால், 2 லிட்டர் பால், ஐந்து லிட்டர் பால் என்று உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த தானத்தை செய்யலாம். இந்தப் பாலை நீங்கள் கொடுக்கும்போது, உங்கள் அருகில் எந்த உயிரினம் வந்தாலும் அந்த உயிரினத்தை உதாசீனப்படுத்த கூடாது. நாய், பூனை போன்ற எந்த ஜீவராசிகள் வந்தாலும் கொடுக்கலாம் தவறு கிடையாது. மனிதர்களுக்காக மட்டும்தான் இந்த தானம் என்று சொல்லி மற்ற ஜீவ ராசிகளை உதாசீனப்படுத்தி விடாதீர்கள். முருகர் எந்த ரூபத்திலாவது வந்து நீங்கள் கொடுக்கும் இந்த பிரசாதத்தை குடித்துவிட்டு உங்களுக்கான ஆசையை வழங்கி விடுவார்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025