இரு மனம் இணையும் திருமண வாழ்வில் பொருத்தம் அவசியம் தேவை. திருமண வாழ்வில் மனப் பொருத்தம் மிகவும் அவசியம். இந்த மனப் பொருத்தம் அமையுமா என்பதை அறிய, ஆண் பெண் ஜாதகம் பொருந்தியுள்ளதா என்பதைக் காண்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதிக பொருத்தங்கள் தேவை என்றாலும் குறிப்பிட்ட பத்து பொருத்தங்கள் உள்ளதா என்பதை ஆண் மற்றும் பெண் வீட்டார் ஜாதகத்தை வைத்து ஜோதிடரிடம் அறிந்து கொள்வார்கள். பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.
அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று முன்னோர்கள்.
அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பதிவில் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையான முக்கியமான பத்து பொருத்தங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
தினப்பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திர பொருத்தம்
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
யோனிப் பொருத்தம்
ராசிப் பொருத்தம்
ராசி அதிபதி பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரஜ்ஜுப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 என்று வந்தால் தினப் பொருத்தம் உண்டு. இந்த எண்ணிக்கையில் இல்லாதிருந்தால் அந்த ஜாதகத்தை விலக்கி விடலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரிக்கிறார்கள். அவை முறையயே தேவ கணம், மானுஷ கணம், மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். வாழ்வில் மங்கலங்கள் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியம்.
திருமண பந்தம் இனிமையுடன் இருக்கவும் இல்லறம் இனிதே நடக்கவும் சம்பத்து மிகவும் அவசியம். அதிலும் புத்திர சம்பத்து அவசியம். இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகளுக்கு சம்பத்து கொடுக்கும். அதுமட்டுமின்றி புத்திரர்கள் மூலம் சம்பத்துக்கள் பெருகும்.
இல்லற வாழ்வை இனிதே துவக்கும் திருமணப் பெண், தனது வாழ்நாள் முழுவதும் மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமாய் காட்சியளிக்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள். அதனால் தான் பெரியோர்களும் திருமணமான பெண்களை “தீர்க்கசுமங்கலி பவ” என்று வாழ்த்துவார்கள். சுமங்கலிதத்தனமாய் இருக்க ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் காண வேண்டும்.
நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. அதன் அடிப்படையில் இந்த பொருத்தம் காணப்படுகின்றது. ஆண்-பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் தேவை. எனவே தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகின்றது. இந்தப் பொருத்தம் இருந்தால் தாம்பத்திய உறவு சிறக்கும்.
இரு மனம் ஒத்த தம்பதியர் வாழ்வு இனிமையாய் இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். அதற்கு ராசிப் பொருத்தம் காண வேண்டியது அவசியம்.
வாழையடி வாழையென வம்சம் வளர வேண்டும் என்று தம்பதியரை வாழ்த்தாத பெரியோர்களே இல்லை எனலாம். சந்ததி விருத்திக்கு ராசி அதிபதி பொருத்தம் அவசியம் காண வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியம். அப்பொழுது தான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர்.
ரஜ்ஜு பொருத்தம் என்பதே, பத்து திருமண பொருத்தங்களுள் மிகவும் முக்கிய பொருத்தம். பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள். அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.
திருமண பொருத்தம் – வேதை பொருத்தம்:
வேதை என்றால் ஒன்றுகொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய பலத்தை குறிப்பது. ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் ஒன்றுக்கொன்று வேதை இல்லாமலிருத்தலே வேதைப் பொருத்தம் எனப்படும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025