விநாயகரின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

விநாயகரின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள்

Posted DateSeptember 13, 2024

எந்தவொரு வேலையும் அல்லது பூஜையைத் தொடங்குவதற்கு முன்பும் தடைகள் இன்றி அந்தக் காரியம் நடைபெற நாம் விநாயகரை வணங்குவோம். அந்த வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட மிகவும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

கணபதி ஸ்லோகம் 1:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்

சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்நோப சாந்தயே!

கணபதி ஸ்லோகம் 2:

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

கணபதி ஸ்லோகம் 3:

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சியாமள கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மகேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே

கணபதி ஸ்லோகம் 4:

கஜானனம் பூத கணாதி சேவிதம்

கபித்த ஜம்போ பலசார பக்ஷிதம்

உமா சுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

கணபதி ஸ்லோகம் 5

கௌரி நந்தன கஜானன

கிரிஜா நந்தன நிரஞ்சனா

பார்வதி நந்தன ஷுபாநன

பாஹி ப்ரபோ மாம் பாஹி ப்ரசன்னா

கணபதி ஸ்லோகம் 6:

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

கணபதி ஸ்லோகம் 7:

 ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

கணபதி ஸ்லோகம் 8:

அல்லல்போம் வல்வினைபோம்

அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம்

போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம்

அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

கணபதி ஸ்லோகம் 9:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்போ பலஸார பக்ஷிதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

கணபதி ஸ்லோகம் 10:

 மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

கணபதி ஸ்லோகம் 11:

 கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கவலை தீருமே.

கணபதி ஸ்லோகம் 12:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது

பூக்கொண்டு துப்பார் திருமேனித்

தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

கணபதி ஸ்லோகம் 13:

 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!

நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.

கணபதி ஸ்லோகம் 14:

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!

விநாயகனே வேட்கை தணிவிப்பான்!

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

விநாயகர் 108 போற்றி

  1. ஓம் விநாயகனே போற்றி

  2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

  3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

  4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

  5. ஓம் அமிர்த கணேசா போற்றி

  6. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி

  7. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி

  8. ஓம் ஆனை முகத்தோனே போற்றி

  9. ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி

  10. ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி

  11. ஓம் ஆபத் சகாயா போற்றி

  12. ஓம் இமவான் சந்ததியே போற்றி

  13. ஓம் இடரைக் களைவோனே போற்றி

  14. ஓம் ஈசன் மகனே போற்றி

  15. ஓம் ஈகை உருவே போற்றி

  16. ஓம் உண்மை வடிவே போற்றி

  17. ஓம் உலக நாயகனே போற்றி

  18. ஓம் ஊறும் களிப்பே போற்றி

  19. ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி

  20. ஓம் எளியவனே போற்றி

  21. ஓம் எந்தையே போற்றி

  22. ஓம் எங்குமிருப்பவனே போற்றி

  23. ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி

  24. ஓம் ஏழை பங்காளனே போற்றி

  25. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

  26. ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி

  27. ஓம் ஒப்பிலாதவனே போற்றி

  28. ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி

  29. ஓம் ஒளிமய உருவே போற்றி

  30. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

  31. ஓம் கருணாகரனே போற்றி

  32. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி

  33. ஓம் கணேசனே போற்றி

  34. ஓம் கணநாயகனே போற்றி

  35. ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

  36. ஓம் கலியுக நாதனே போற்றி

  37. ஓம் கற்பகத்தருவே போற்றி

  38. ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி

  39. ஓம் கிருபாநிதியே போற்றி

  40. ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

  41. ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி

  42. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

  43. ஓம் குணநிதியே போற்றி

  44. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

  45. ஓம் கூவிட வருவோய் போற்றி

  46. ஓம் கூத்தன் மகனே போற்றி

  47. ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

  48. ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி

  49. ஓம் கோனே போற்றி

  50. ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி

  51. ஓம் சடுதியில் வருபவனே போற்றி

  52. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

  53. ஓம் சங்கடஹரனே போற்றி

  54. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

  55. ஓம் சிறிய கண்ணோனே போற்றி

  56. ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி

  57. ஓம் சுருதிப் பொருளே போற்றி

  58. ஓம் சுந்தரவடிவே போற்றி

  59. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

  60. ஓம் ஞான முதல்வனே போற்றி

  61. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி

  62. ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி

  63. ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி

  64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி

  65. ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி

  66. ஓம் தேவாதி தேவனே போற்றி

  67. ஓம் தொந்தி விநாயகனே போற்றி

  68. ஓம் தொழுவோ நாயகனே போற்றி

  69. ஓம் தோணியே போற்றி

  70. ஓம் தோன்றலே போற்றி

  71. ஓம் நம்பியே போற்றி

  72. ஓம் நாதனே போற்றி

  73. ஓம் நீறணிந்தவனே போற்றி

  74. ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி

  75. ஓம் பழத்தை வென்றவனே போற்றி

  76. ஓம் பாரதம் எழுதியவனே போற்றி

  77. ஓம் பரம்பொருளே போற்றி

  78. ஓம் பரிபூரணனே போற்றி

  79. ஓம் பிரணவமே போற்றி

  80. ஓம் பிரம்மசாரியே போற்றி

  81. ஓம் பிள்ளையாரே போற்றி

  82. ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

  83. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி

  84. ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி

  85. ஓம் புதுமை வடிவே போற்றி

  86. ஓம் புண்ணியனே போற்றி

  87. ஓம் பெரியவனே போற்றி

  88. ஓம் பெரிய உடலோனே போற்றி

  89. ஓம் பேரருளாளனே போற்றி

  90. ஓம் பேதம் அறுப்போனே போற்றி

  91. ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி

  92. ஓம் மகிமையளிப்பவனே போற்றி

  93. ஓம் மகாகணபதியே போற்றி

  94. ஓம் மகேசுவரனே போற்றி

  95. ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி

  96. ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி

  97. ஓம் முறக்காதோனே போற்றி

  98. ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

  99. ஓம் முக்கணன் மகனே போற்றி

  100. ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி

  101. ஓம் மூத்தோனே போற்றி

  102. ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி

  103. ஓம் வல்லப கணபதியே போற்றி

  104. ஓம் வரம்தரு நாயகனே போற்றி

  105. ஓம் விக்னேஸ்வரனே போற்றி

  106. ஓம் வியாஸன் சேவகனே போற்றி

  107. ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி

  108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

முழு முதற் கடவுளாம் விநாயகரை நாம் விநாயக சதுர்த்தி நாளில் மட்டுமின்றி எல்லா நாளிலும் போற்றி வணங்குவதன் மூலம் அவரது அருளால் காரியத் தடைகள் யாவும் நீங்கப் பெறலாம். எனவே மேலே கூறப்பட்ட மந்திரங்கள் அனைத்தையும் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். விநாயக சதுர்த்தி அன்று இவற்றை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.