Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கணேஷ் சதுர்த்தி 2024 எப்போது? தேதிகள், நேரங்கள், முக்கியத்துவம், சடங்குகள் மற்றும் பலவற்றை அறிந்து கொள்ளுங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கணேஷ் சதுர்த்தி 2024 எப்போது? தேதிகள், நேரங்கள், முக்கியத்துவம், சடங்குகள் மற்றும் பலவற்றை அறிந்து கொள்ளுங்கள்

Posted DateAugust 19, 2024

விநாயகர் சதுர்த்தி 2024 : 7 செப்டம்பர் 2024 சனிக்கிழமை 

இந்தியாவில் கொண்டாடப்படும் பல முக்கியமான பண்டிகைகளில் விநாயக சதுர்த்தியும் ஒன்று ஆகும்.  இது பிரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும், விநாயக சதுர்த்தி அன்று, விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் என்று நாம் அன்புடன் அழைக்கும் விநாயகப் பெருமானைக் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் வரும் சதுரத்தி நாளில் இந்த விழா கொண்டாடப்படும். இது வழக்கமாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை இருக்கும். விநாயக சதுரத்தி நாளில் விநாயகரை வணங்குவதன் மூலம் நமக்கு அவரின் பரிபூரண ஆசியும் அருளும் கிடைக்கிறது.

விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது?

சிவன் மற்றும் பார்வதி தேவியின் அன்பு மகனான விநாயகப் பெருமானின் பிறந்த நாளைத் தான் நாம் விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். பல்வேறு பிராந்தியங்களில், இந்த புனிதமான விழா  விநாயக சதுர்த்தி அல்லது கணேச  சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது, இது பல்வேறு கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.  விநாயகர் தடைகளை நீக்குபவர், மற்றும் ஆரம்பத்தின் மங்களகரமான கடவுள் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்த புனிதமான நேரத்தில், அவரை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் வெற்றி, ஞானம் மற்றும் செழிப்புக்கான ஆசிகள் கிடைக்கின்றன என்பது ஐதீகம்.

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற தென் பிராந்தியங்களில், விநாயக சதுர்த்தி பொதுவாக ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. வட பிராந்தியங்களில் குறிப்பாக மும்பை போன்ற இடங்களில் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்தியா முழுவதும் சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள்

பிராணபிரதிஷ்ட:  விநாயக சதுர்த்தி நாள் அன்றோ அல்லது அதற்கு முந்தைய நாளோ களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வாங்கி வர வேண்டும். ஒரு மனை அல்லது தட்டிற்கு மஞ்சள் குங்குமம் பூசி அலங்காரம் செய்து அதன் மீது விநாயகர் சிலையை வைத்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் எருக்க மாலை மற்றும் விநாயகர் குடையையும் வாங்கி வர வேண்டும். விநாயக சதுர்த்தி அன்று அந்த சிலைக்கு ஆவாஹனம் செய்து உயிரோட்டம் அளிக்க வேண்டும்.

ஷோடசோபச்சார பூஜை :

பதினாறு பாரம்பரிய சடங்குகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு பூஜையை பக்தியுடன் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை நன்கு அலங்கரித்து மஞ்சள் குங்குமம் சந்தனம் மற்றும் பூக்கள் சாற்ற வேண்டும். அருகம்புல் அவருக்கு விசேஷமானது. அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

கணேஷ் விசர்ஜன்: விநாயகர் சதுர்த்தி அன்று மாலையோ, அல்லது அடுத்த நாளோ அல்லது மூன்று நாட்கள் கழித்தோ அவரவர் குடும்ப வழக்கப்படி விநாயகர் சிலைகளை தண்ணீரில் மூழ்கடித்து, அவர் கைலாச மலைக்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில், பிரார்த்தனைகள் மற்றும் இதயப்பூர்வமான பிரியாவிடைகளுடன் பக்தர்கள் விடைபெறுவது  வழக்கம். இத்துடன் இந்த திருவிழா நிறைவடையும்.

குடும்ப சடங்குகள்: விநாயக சதுர்த்தியின் போது  குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீடுகளில் ஒன்று கூடி பிரார்த்தனை மேற்கொள்வார்கள். மந்திரங்களை ஜெபிப்பார்கள. பஜனைகளின் இனிமையான மெல்லிசை எங்கும் எதிரொலிக்கும். இதயங்களைத் தழுவும் இனிமையான சூழ்நிலையை எங்கும் காணலாம்.

கலை பாரம்பரியம்: இந்தியாவின் சில தென் பகுதிகளில், பழங்கள், வாழை இலைகள் மற்றும் பிற இயற்கை பொருட்களிலிருந்து விநாயகர் சிலைகளை உருவாக்கும் கலை பாரம்பரியம் துடிப்பான படைப்பாற்றலுடன் செழித்து வளர்கிறது.

 விநாயகர் சதுர்த்தியை வீட்டில் எவ்வாறு கொண்டாட வேண்டும் ?

விநாயக சதுர்த்திக்கு முந்தைய நாள், உங்கள் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்யுங்கள்.

பூஜைக்காக, களிமண் அல்லது மஞ்சளைப் பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து விநாயகப் பெருமானின் சிலையை உருவாக்கலாம், இது கொண்டாட்டத்திற்கு ஒரு தனிப்பட்ட கலை உணர்வை சேர்க்கிறது.

மாற்றாக, நீங்கள் கடைகளில் விநாயகரின் சிலையை  வாங்கலாம், இது பல வீடுகளுக்கு மிகவும் பிரபலமான தேர்வாகும்.

பூஜை பீடத்தின் மீது உயரமான மேடையை அமைத்து உங்கள் வீட்டில் விநாயகப் பெருமானுக்கு ஒரு புனித இடத்தை தயார் செய்யுங்கள்.

பீடத்தின் முன், அழகிய ரங்கோலியை வரைந்து, பீடத்தின் மீது அழகான துணியை விரிக்கவும். இறுதியாக, பீடத்தின் மீது விநாயகப் பெருமானின் சிலையை வைக்கவும்.

விநாயகப் பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் எருக்கம் பூ  மலர்களால் சிலையை அலங்கரித்து, அருகம்புல் வைக்கவும்.

விநாயகப் பெருமானுக்கு மோதங்கள் அல்லது கொழுக்கட்டை மற்றும் பழங்கள் போன்ற உணவுகளைத் தயாரிக்கவும்.

விநாயகப் பெருமானை குடும்பத்தினருடன் வழிபட்டு, சிலைக்கு ஆரத்தி வழிபாடு செய்யுங்கள்.

பூஜைக்கு நீங்கள் தயாரித்த உணவை அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து பிரசாதம் சாப்பிட்டு மகிழுங்கள்.

நாள் முடிவில், மீண்டும் ஆரத்தி சடங்கு செய்து, தண்ணீரில் மூழ்க வைக்கும் சடங்குக்குத் தயாராகுங்கள்.