மிதுன ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது மிதுன ராசிக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடாக அமைவதால் அனைத்து விதமான பாக்கியங்களையும் வழங்கக்கூடியதாக குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. ஒன்பதாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக மிதுன ராசியையும், ஏழாம் பார்வையாக மூன்றாம் பாவத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஐந்தாம் பாவத்தையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது மிதுன ராசியைச் சார்ந்தவர்களுக்குத் திருமணம், புத்திர பாக்கியம், தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் மற்றும் வெளிநாட்டுப் பயணம் போன்ற அதிர்ஷ்டத்துடன் வாழ்க்கையை அமைத்து தரும் வருடமாக அமையப்போகிறது.
குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
குடும்பம்:
குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். நண்பர்களிடமும் நல்லுறவு காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பும் ஆதாயமும் உண்டு தாயார் உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளுடனான உறவு வலுப்படும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்.
குடும்ப உறவு பலப்பட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
அதிக பணிகள் இருந்தாலும் கடமைகள் அழைத்தாலும் நீங்கள் உடல் ஓய்விற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிக பணிகள் காரணமாக சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளலாம். வயதான பெண்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெருவது நன்மை பயக்கும்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
காதல் / திருமணம்:
இளம் வயது காதலர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பேச்சில் இனிமை வேண்டும். கடுமையான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். திருமணத்திற்குக் காத்திருக்கும் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு சுமுக உறவாக நல்லுறவாக இருக்கும்.
திருமணமான தம்பதிகளுக்கிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
பொருளாதார நிலை ஏற்றத்துடன் இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பங்கு வர்த்தகம், ஊக வணிகம் லாபங்களை பெற்றுத் தரும். தொழிலில் செய்த முதலீடுகள் இப்பொழுது நன்மையான பலன்களை அளிக்கும். நீங்கள் தான தரும காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
நிதிநிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரிசே லக்ஷ்மி பூஜை
வேலை / தொழில்:
அரசுத் துறையில் இருப்பவர்கள் கடினமாக உழைத்தால் தான் வெற்றி பெற இயலும். அங்கீகாரம் பெற இயலும். தனியார் துறையில் பணியில் இருப்பவர்களின் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் எதிர் கால திட்டம் குறித்து உங்கள் மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். கட்டிடத் துறை நிபுணர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவத் தொழிலில் இருப்பவர்களுக்கு தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுய தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான பயணங்கள் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண அஷ்டலக்ஷ்மி பூஜை
கல்வி:
மிதுன ராசி மாணவர்கள் சிற்பபகப் கல்வி பயின்று வெற்றி பெறுவார்கள். மனதில் அமைதியான நிலை இருக்கும். பதட்டம் ஏதுமின்றி எளிதாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட: கணேஷ பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
- முதியவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.
- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
- மஞ்சள் ஆடைகளை வியாழக்கிழமைகளில் அணியவும்.
Leave a Reply