கடக ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது. குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது கடக ராசிக்கு ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீடாக அமைவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. குரு, எட்டாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக விரைய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுகஸ்தானத்தையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது கடக ராசியைச் சார்ந்தவர்களுக்கு சொத்துக்கள் வாங்க சுப விரயத்தையும், தன நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அமைத்துத் தரும் வருடமாக அமையப்போகிறது.
குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
குடும்பம்:
குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிக பொறுப்புகளை அளிக்கும். ஓய்விற்கும் குடும்பத்தை கவனிக்கவும் நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். இதனால் நீங்கள் குடும்ப உறுப்பினர்களை திருப்திபடுத்த இயலாது. பணிகள் காரணமாக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கும் என்பதால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். அதே சமயம் கடுமையான பணிகள் தரும் அசதி காரணமாக நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளவும் நேரலாம். எனவே பொறுமையாகச் செயல்படுங்கள். தேவையற்ற வார்த்தைகளை பேசாதீர்கள்.
குடும்ப உறவினர்களுக்கு இடையே நல்லுறவு நீடிக்க துர்கா பூஜை
ஆரோக்கியம்:
ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு வழி வகுக்கும். உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு ஆகும். முறையற்ற உணவு காரணமாக அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உணவில் கவனம் தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
காதல் / திருமணம்:
கடக ராசி காதலர்கள் இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் இனிமையான தருணங்களை அனுபவிப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். பரஸ்பரம் ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்படுவர். மன ஒற்றுமை காரணமாக இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும்.
தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை
நிதி நிலை:
நிதிநிலை நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் ஏற்றமானதாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும். கடின உழைப்பின் மூலம் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் காண்பார்கள். உங்களில் சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை / தொழில்:
பணியிடச் சூழல் ஆதரவு தரும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. சக பணியாளர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க இயலும். பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் ஏற்றம் காண்பார்கள். சிலர் கடன் வாங்கி சுய தொழில் ஆரம்பிக்கலாம். புதிய தொழில் முதலீடுகள் லாபம் அளிக்கும். வாடிக்கையாளர்கள் ஆதரவு கிடைக்கப் பெற்று தொழிலில் முன்னேற்றம் கிட்டும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக குரு பூஜை
கல்வி:
பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று படிப்பில் வெற்றி காண்பார்கள். உயர் கல்வி மாணவர்கள் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வெற்றி இலக்கை எட்ட இயலும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்வார்கள். வெளி நாடு சென்று படிக்க முயற்சி மேற்கொண்டால் நீங்கள் அதில் வெற்றி காண இயலும்.
கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
- பேராசிரியர் நிலையில் உள்ளவர்களுக்கு வஸ்திர தானம் செய்யவும்.
- தினமும் 20 நிமிடம் தியானம் செய்யவும்.
- பிரதோஷ வழிபாடு நன்மை பயக்கும்.
Leave a Reply