சத்ரு சம்ஹார ஹோமம் என்பது, நாம் பக்தியுடன் போற்றும் முருகப் பெருமான் என்னும் சுப்பிரமணியர் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். தெய்வ தம்பதிகளான சிவபெருமான்-பார்வதி தேவியின் மகனாக அவதரித்த சுப்பிரமணியரை, பெரும் சக்தி வாய்ந்த தெய்வமாக, பண்டைய ரிக் வேதம் போற்றுகிறது. தூய அன்பின் அடையாளமாகவும் திகழும் இவர், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, பல நன்மைகளை அருளக் கூடியவர்.
சத்ரு சம்ஹார ஹோமம், எதிரிகளை வெற்றி கொள்ள உதவும் வழிபாடாகும். இதன் மூலம் வெளிப்படும் பெரும் ஆற்றல் நம்மை பாதுக்காக்கும் சக்தி வாய்ந்த கவசமாக விளங்குகின்றது.
சத்ரு சம்ஹார ஹோமத்தின் மூலம், பகவான் சுப்பிரமணியரின் அருளை நாம் பெறலாம். இதன் மூலம் தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும்.
சத்ரு சம்ஹார ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. உங்கள் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் எந்த இடத்திலும் இந்த ஹோமத்தை செய்யலாம். இதில் பங்கு கொள்வதன் மூலம், உங்களை பாதிக்கும் அனைத்து தீய சக்திகளிடமிருந்தும், உங்களுக்கு, தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
நவக்கிரக தோஷம், பித்ரு சாபம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
தீய சக்திகளுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும்
தீராத நோய்கள், கடன்கள் தீரும். பயம், சோர்வு விலகும்
கண் திருஷ்டி, சூனியம் போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
குடும்ப உறவுகள் வலுப்படும்
அரசியல், ராணுவம், காவல் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு நலம் தரும்
தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி காண உதவும்
ஓம் கார்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்கந்தப் பிரசோதயாத்