சிவபெருமானின் துணைவியாய், அவரின் சரி பாதி பாகமாகத் திகழ்கிறார், அன்னை பார்வதி. இவர் அழகின் உறைவிடமாகவும் விளங்குகிறார். பார்வதி அழகு ஹோமம், இந்த தேவியைக் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடாகும். இது, உங்கள் அழகு மற்றும் வனப்பை மேம்படுத்தும் சக்தி வாய்ந்தது.
பார்வதி ஹோமம், அழகை அதிகரித்து, உடலை மிளிர வைக்கக் கூடியது. அத்துடன், தூய எண்ணங்களை ஊக்குவித்து, உங்களுக்குள் மறைந்திருக்கும் வசீகரத்தையும் வெளிக் கொணர உதவுகிறது. நல்ல தோற்றத்தையும், பொலிவையும் பெற விரும்பும் அனைவருக்கும், இது ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, அகத்திலும், புறத்திலும் அழகும், பொலிவும் பெற்று மகிழுங்கள்.
பார்வதி தேவியின் அழகு பார்ப்பவரின் மனதையும், ஆன்மாவையும் ஈர்த்து, வணங்க வைக்கும் அற்புதத் தன்மை வாய்ந்தது. அவரது வழிபாடாகச் செய்யப்படும் இந்த ஹோமத்தில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம், மேம்பட்ட உடல் வளமும், பிறரை ஈர்க்கும் அழகும் பெற்று, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலாம். சமூகத் தொடர்புகள் அதிக அளவில் கிடைக்கப்பெற்று, மதிப்பும், மரியாதையும் பெறலாம். நேர்மறைக் கண்ணோட்டத்துடன் உலகை எதிர்கொண்டு வெல்லலாம்.
பார்வதி அழகு ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. பார்வதி தேவிக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளில், இந்த ஹோமத்தைச் செய்வதன் மூலம், மேலும் பலன்கள் பல பெறலாம். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்பிக்கையையும், உற்சாகத்தையும் பெற்று, வாழ்வில் பலவித நன்மைகளை அடையலாம்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
குழம்பிய எண்ணங்களிலிருந்து விடுபட்டு, தெளிந்த மனம், உயர்ந்த சிந்தனை பெறலாம்
அழகு, வனப்பு, கவர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம்
தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்
ஓம் ஹ்ரீம் சுந்தராம்பிகாயை நமஹ