தில ஹோமம் என்பது செயற்கை முறையில் இறந்த நம் முன்னோர்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும். இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் ஹோமம். ஏனெனில் அசாதாரணமாக இறந்தவர்களின் ஆன்மாவை தொந்தரவு செய்வது விவேகமற்றது . இந்த உலகத்திலிருந்து அவர்கள் புறப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மிகுந்த மரியாதையுடன் செய்யப்படுகின்றது. ராமேஸ்வரம் சக்திவாய்ந்த புண்ணியஸ்தலம் என்பதால் இந்த ஹோமத்தை சேதுசீர ராமேஸ்வரத்தில் செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை ஆழ்வார்திருநகரியில் தாமிரபரணி நதிக்கரையில் செய்து இன்னுயிர் பிரிந்த ஆன்மா முக்தியடைய அஸ்தியினை கடலில் கரைக்க வேண்டுமென வேதங்கள் கூறுகின்றன.
தில ஹோமம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை செய்யப்படும் ஹோமம் என்பதால் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதில் பங்கு கொள்ள வேண்டியது அவசியம். செயற்கை மரணம் அல்லது அகால மரணம் கண்ட ஆன்மாக்களை முக்தியடையாமல் இருக்கும் வேதனை நிலையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களின் வேதனை நமக்கு பல கஷ்டங்களை அளிக்கும். இந்த ஹோமத்தை ராமேஸ்வரத்தில் செய்வதன் மூலம் இவற்றிலிருந்து விடுபடலாம். இந்த ஹோமம் இறந்த ஆன்மாக்களுக்கு ஒரு இரட்சகராக வருகிறது மற்றும் மீள நினைப்ப்வரக்ளுக்கு ஓரு தீர்வை வழங்குகிறது
குடும்ப அங்கத்தினர்களின் செயற்கை மரணம் மக்களுக்கு பல தடைகளை ஏற்படுத்துகின்றது மற்றும் அவர்களது உண்மையான திறனை அடைவதில் இருந்து தடுக்கிறது. அவர்கள் சிறிய விஷயங்களில் கூட பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். தேவையற்ற ஏமாற்றங்களை சந்திக்கின்றனர். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் இந்த தில ஹோமம் தீய விளைவுகளை தடுப்பதுடன் இறந்த ஆன்மாவிற்கு முக்தி அளிக்கின்றது.
ஆஸ்ட்ரோவேட் புரோகிதர்கள் தில ஹோமம் செய்வதில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். நியமங்களை கிரமமாக கடைபிடித்து வேதாகம முறைப்படி ஹோமத்தை நடத்தித் தருவார்கள். எங்களது பயிற்சி வாய்ந்த புரோகிதர்கள் புனிதமான முறையில் ஹோமத்தை நடத்தி உரிய மந்திரங்களைக் கூறி இறந்த ஆன்மா முக்தி பெற வழி வகுப்பார்கள். இறந்த ஆன்மாக்கள் முக்தி பெறுவதன் மூலம் மகிழ்ந்து அவர்கள் தங்கள் வம்சத்தினருக்கு ஆசிகளை வழங்கி வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்கள்.
உங்கள் முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்வதன் மூலம் நீங்கள் கீழ்கண்ட பலன்களைப் பெறலாம்.
செயற்கை மற்றும் அகால மரணமடைந்த ஆன்மாக்களுக்கு விடுதலை கிடைக்கும்.
இறந்த ஆன்மாக்களுக்கு முக்தி கிடைக்கும்
எதிர்மறை ஆற்றல்களை நீக்கலாம்
இறந்த ஆன்மாக்கள் இறைவனடி சேர உதவலாம்
Sends departed souls to the lotus feet of God