‘ஆயுஷ்’ என்பது ஆயுள், அதாவது, வாழ்நாளைக் குறிக்கும். இதை வழங்கும் கடவுள், ஆயூர் தேவதை எனப்படுகிறார். இவர், தீர்க்காயுள், நல்ல ஆரோக்கியம், லௌகீக மற்றும் ஆன்மீகப் பணிகளை நாம் திறமையுடன் கையாளும் ஆற்றல் போன்றவற்றை, நமக்கு வழங்கக் கூடியவர். இந்த ஆயூர் தேவதையை குறித்து நடத்தப்படும் ஆயுஷ் ஹோமம், நல்ல ஆயுள், ஆரோக்கியம், செயல் திறன், மன வேதனைகளிலிருந்து விடுதலை போன்றவற்றை அளிக்கக் கூடியது.
இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், சிறப்பாகச் செயல்பட்டு, வாழ்க்கையின் லட்சியங்களை நீங்கள் அடைய முடியும். இந்த ஹோமத்திலிருந்து பெறப்படும் ஆற்றல், உங்கள் உடலைச் செம்மைப்படுத்தி, தீர்க்க முடியாத நோய்களையும் குணப்படுத்தி, ஆரோக்கிய வாழ்வை தரக்கூடியது. குறிப்பாக, நோயால் அவதியுறும் முதியவர்களும், குழந்தைகளும் இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு நல்ல நிவாரணம் பெறலாம்.
இந்த ஹோமத்தில், மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் சிரஞ்சீவிகளான கீழ்க்கண்ட தெய்வங்களும், முனிவர்களும் வழிபடப் படுகிறார்கள்:
மார்கண்டேயர், பகவான் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர், ஆஞ்சநேயர், மகாபலி சக்கரவர்த்தி, விபீஷணர், வேத வியாசர், அஸ்வத்தாமா, குரு கிருபாச்சாரியார்.
இந்த சிறப்பம்சம் வாய்ந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தீராத நோய்களிலிருந்து விடுதலை பெறுங்கள். நீண்ட நாள் வியாதிகளிலிருந்தும் நிவாரணம் பெறுங்கள்.
ஆயுஷ் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில், சூரிய உதயத்திற்கு முன்பு இந்த ஹோமம் செய்வது சிறந்தது. தவிர, சுப ஹோரைகளிலும் இதை நடத்தலாம். உங்கள் பிறந்த நாள், ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் இந்த ஹோமம் செய்வது, நல்ல பலன்களைத் தரும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, இறை அருளால், ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழுங்கள்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
தீராத நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்
முதியவர்களும் குழந்தைகளும், வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்
நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்
அபாயங்களிலிருந்தும், அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்
உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம்
பொருள் ரீதியான மற்றும் ஆன்மீக ஆசிகளைப் அடையலாம்
வரவிருக்கும் ஆண்டில் வெற்றிகள் ஈட்டலாம்
ஓம் ஹாம் ஆயுர் தேவதாய ஸ்வாஹா