sign in Account
x
x
Search
x
பிரத்யேகமான லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் துர்கா சூக்தம் ஹோமம்

பிரத்யேகமான லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் துர்கா சூக்தம் ஹோமம்

துர்கா தேவி, தெய்வீக சக்தியின் வடிவமாகத் திகழ்பவள் ஆவாள். மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதாரம் எடுத்த இவர், அன்னை பார்வதியின் வடிவமாகவும் விளங்குகிறார். இவரது அருளால், தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் அமைதியும், சந்தோஷமும் பெருகும்.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

தெய்வீக பாதுகாப்பு அளிக்கும் ஹோமம்

பாதுகாப்பு தரும், அதிசயங்கள் நிகழ்த்தும் தேவி துர்கா ஹோம வழிபாடு

அறிமுகம்

Lalitha Sahasranamam Chanting

துர்கா தேவி, தெய்வீக சக்தியின் வடிவமாகத் திகழ்பவள் ஆவாள். மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதாரம் எடுத்த இவர், அன்னை பார்வதியின் வடிவமாகவும் விளங்குகிறார். இவரது அருளால், தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் அமைதியும், சந்தோஷமும் பெருகும்.

துர்கா சூக்தம் ஹோமம், துர்கா தேவியைக் குறித்து நிகழ்த்தப்படும் சக்தி வாய்ந்த ஹோம வழிபாடாகும். இது, அன்னையின் தெய்வீக பாதுகாப்பைப் பெற்றுத் தரக் கூடியது. இதிலிருந்து பெருகும் நேர்மறை ஆற்றல்கள், தீய விளைவுகள், துரதிர்ஷ்டம் போன்றவற்றுக்கு எதிரான சக்தி வாய்ந்த கவசமாக விளங்கும்.

துர்கா சூக்தம் ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

துர்கா தேவி, படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் புரியும் பெரும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே, இவரை, பிரபஞ்சத்தின் அன்னை என பண்டைய வேதங்கள் புகழ்கின்றன. இவரது தெய்வீக குணங்களையும், ஆற்றல்களையும் போற்றும் இந்த ஹோமம், எதிர்மறை சக்திகளை அழித்து, மக்களின் வாழ்க்கையில் நிம்மதியையும், ஸ்திரத் தன்மையையும் அளிக்கக் கூடியது.

பாரம்பரிய முறை ஹோமம்

துர்கா சூக்தம் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தின் பொழுது, அன்னை துர்காவைப் போற்றும் துர்கா சூக்தம் மந்திரம் பக்தியுடன் ஓதப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள், தேவியுடன் தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இயலும். முன்னேற்றப் பாதையில் குறுக்கிடும் தடைகளை விலக்கிக் கொள்ள முடியும். குங்குமம் பூசப்பட்ட எலுமிச்சம் பழங்களை தேவிக்குப் படைப்பது, இந்த ஹோமத்தின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. இது தீய சக்திகளின் தாக்கத்தை நீக்கி, நம்மை பாதிக்கும் திருஷ்டி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த வழிபாட்டில் பங்கு கொள்வதன் மூலம், நீங்கள் துர்கா தேவியின் அருள் பெற்று, லௌகீகம் மற்றும் ஆன்மீக ரீதியான பல நல்ல பலன்களை அடையலாம்.

லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்

லலிதா ஸஹஸ்ரநாமம் என்பது, லலிதா தேவியைப் போற்றி, அவரது 1000 நாமங்களை (பெயர்களை) விளக்கும் ஸ்தோத்திரமாகும். மகா மேரு எனப்படும் பிரம்மாண்ட மலையின் உச்சியில் வாசம் செய்யும் லலிதா தேவிக்கு மிகவும் பிடித்தமானதாக விளங்கும் இந்த 1000 நாமங்கள், நம் பாபங்களைக் களைந்து, விஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை போக்க வல்லவை. இதைத் தவறாமல் ஓதுவது, பல செல்வங்களை அளிக்கும். விபத்து போன்றவற்றால் விளையும் அகால மரணங்களைத் தடுக்கும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

துர்கா சூக்தம் ஹோமம் மற்றும் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்தின் நற்பலன்கள்
  • உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளைத் தீர்த்து, வாழ்க்கையில் ஸ்திரத் தன்மையை அளிக்கும்

  • தடைகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி, வெற்றிக்கு வழி வகுக்கும்.

  • மன அழுத்தம், சோகம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்

  • எதிரிகளை வெல்லும் ஆற்றல் தரும்

  • உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, ஆக்க சக்தி, பொருளாதார வளம், மன வலிமை, ஆனந்தம் போன்றவற்றைத் தரும்

  • கண் திருஷ்டி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்களுக்கு எதிராக பாதுகாப்பு தரும்

  • வேலை, தொழில் போன்றவற்றில் நஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும்

  • வீட்டிலும், அலுவலகத்திலும் நிம்மதியை அனுபவிக்க உதவும்

காணொளிகள்

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept