sign in Account
x
x
Search
x
நவகிரக ஸுக்த பாராயணம் மற்றும்  நட்சத்திர சாந்தி ஹோமம்

நவகிரக ஸுக்த பாராயணம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம்

நவகிரக ஸுக்த பாராயணத்துடன் கூடிய நட்சத்திர சாந்தி ஹோமம், அதன் சக்தி வாய்ந்த அதிர்வலைகளின் மூலம் தோஷங்களைப் போக்க வல்லது. ஒரு தனி நபரின் வாழ்க்கையில் கிரகங்களின் பெயர்ச்சி மாறுதல்களை ஏற்படுத்தும். இந்தப் பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணப்படும். இந்த ஹோமத்தின் மூலம் அதிக பட்ச நன்மை பெற இதனை வருடத்திற்கு ஒரு முறை ஒருவரது ஜென்ம நட்சத்திரத்தில் செய்வது சிறந்தது.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

நவகிரகங்கள் மற்றும் ஜன்ம நட்சத்திரத்தைப் போற்றி வழிபடும் ஹோமம்

அறிமுகம்

NAVAGRAHA SUKTAM CHANTING AND NAKSHATRA SHANTI HOMA

நவகிரக சூக்தம் பாராயணத்துடன் நட்சத்திர சாந்தி ஹோமம் செய்வது, தெய்வீக ஆற்றல்களை உருவாக்கக் கூடிய சக்தி வாய்ந்த வழிபாடாகும். நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்து, நன்மை பெற வேண்டி இந்த ஹோமம் மற்றும் பாராயணம் நிகழ்த்தப்படுகிறது. கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக சில சமயம் வாழ்க்கையில் சங்கடங்களும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவற்றைச் சமாளித்து, நாம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பாதையில் செல்ல, இந்த வழிபாடு துணைபுரிகிறது. தீராத நோய்களைத் தீர்த்து நல்வாழ்வு அளிக்கக் கூடிய வழிபாடாகவும் இது விளங்குகின்றது.

நவகிரக சூக்தம் பாராயணம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

இந்த வழிபாடு, கிரகங்களைத் திருப்திப்படுத்துகின்றது. உங்கள் ஜன்ம நட்சத்திரத்திற்கும், கிரகங்களுக்கும் இடையே ஏற்படும் நெருடல்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த ஒரு வழிபாடு ஆகும். இதனால், கிரக, நட்சத்திர தோஷங்கள் விலகி, உங்கள் வாழ்வு பலவகையிலும் மேம்படும். பாராயணத்துடன் கூடிய இந்த ஹோமம், சக்தி வாய்ந்த, வழிபாடாகத் திகழ்கிறது. இது, உங்களைச் சூழ்ந்துள்ள தீய சக்திகளை நீக்கக்கூடியது. இதனால் நோய்கள் குணமாகும். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும். வாழ்க்கையின் குறிக்கோள்களை நீங்கள் அடைந்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

பாரம்பரிய முறை ஹோமம்

நவகிரக சூக்தம் பாராயணம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டில் நவ கிரகங்களும் போற்றி வழிபடப்படுகின்றன. மேலும், குறிப்பாக உங்கள் பிறந்த நாளுடன் தொடர்புடைய கிரகத்திற்கு சிறப்பாக வழிபாடு செய்வதன் மூலம், அந்த கிரக தேவதையின் ஆசியும் கிடைப்பதற்கு ஏதுவாகின்றது. வருடத்திற்கு ஒரு முறை, உங்கள் ஜன்ம நட்சத்திர நாளில், இதை நடத்துவது, மிக சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. இதனால், உங்கள் வாழ்க்கையில், அசாதாரணமான பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஹோம வழிபாடு, எசென்ஷியல், என்ஹான்ஸ்ட் மற்றும் எலைட் என மூன்று பேக்கேஜ்களில் உங்களுக்குக் கிடைக்கிறது. இதிலிருந்து, உங்களுக்கு விருப்பமான ஒன்றை, நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பேக்கேஜிற்கு தகுந்தவாறு, இந்த வழிபாட்டைச் செய்யும் புரோகிதர்களின் எண்ணிக்கை மாறுபடும். அதிக பலனும் கிடைக்கும். அஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நடத்தப்படும் பொழுது, யந்திரம், காப்பு போன்ற பூஜைக்குரிய பொருட்கள் வீட்டில் வைத்து பூஜிப்பதற்காக அளிக்கப்படும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இத்துடன், நவகிரகங்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் காப்பும் உங்களுக்கு வழங்கப்படும். இவற்றை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசியும், அணிந்து கொண்டும் இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

நவகிரக சூக்தம் பாராயணம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமத்தின் நற்பலன்கள்
  • நவகிரகங்களின் நல்லாசி கிடைக்கும்

  • மனோதைரியம் அதிகரிக்கும். இதனால், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்

  • வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்

  • கடின உழைப்புக்குத் தகுந்த பலன்களைப் பெற முடியும்

  • நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும்

காணொளிகள்

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept