அவ்வப்பொழுது நிகழும் கிரகப்பெயர்ச்சிகளின் காரணமாகவோ, ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தின் காரணமாகவோ, ஒருவரது வாழ்க்கையில் அசுப விளைவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. . நட்சத்திர சாந்தி பாராயணம் மற்றும் நவக்கிரக ஹோமம் என்பது, இந்த பாதிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கும், வேதகால வழிபாடாகும். நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் சாதகமற்ற நிலையை மாற்றி, நமது கர்ம வினைகளை தீர்க்க, இந்த வழிபாடு உதவும் என்கின்றன புராணங்கள்.
இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் தைரியம் பிறக்கும். சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் உத்வேகம் உண்டாகும். லௌகீக விஷயங்கள் மற்றும் ஆன்மீக விஷயங்கள் என இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும்.
கிரகங்கள் நமது வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றன. நமது தினசரி நடவடிக்கைகளிலும் இவை, ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த சக்தி வாய்ந்த வழிபாடு, கிரகங்களின் பாதகப் பலன்களைத் தடுத்து, அவற்றின் அசுப விளைவுகளைப் போக்கி, நமது நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்பவை. நட்சத்திர சாந்தி பாராயணம் மற்றும் நவக்கிரக ஹோமத்தில் பங்கு கொள்வது, உங்களைத் தூய்மைப் படுத்தி, உங்கள் உடல் மற்றும் ஆன்மா என இரண்டுக்கும் மிக்க நன்மை விளைவிக்கும். இதனால் தீராத நோய்கள் தீரும். செல்வ நிலை மேம்படும். நம்பிக்கை பெருகும். வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டு வெல்லும் மன உறுதி ஏற்படும். துன்பங்களற்ற, இனிய வாழ்க்கை வாழ இயலும்.
நட்சத்திர சாந்தி பாராயணம் மற்றும் நவகிரக ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதன் மூலம், நவகிரக மண்டலத்துடன், உடனடியாக, ஆன்மீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். கிரகங்களின் ஆற்றலால், தீய சக்திகளை விலக்கிக் கொள்ள முடியும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
உடலும், மனமும் தூய்மையடையும்
சோர்வு விலகும். வலிமை கூடும். ஆரோக்கியம் மேம்படும்
மனம் ஒருமுகப்பட்டு தளைகளிலிருந்து விடுபடுவதற்கான ஞானம் பிறக்கும்
சூரிய பகவானின் அபார சக்தியைப் பெற்றுப் பயனடைய முடியும்