கனகதாரா என்ற சம்ஸ்கிருத சொல், “பொன் (தங்கம்) மழை” என்று பொருள்படும்., செல்வத்தின் கடவுளான மகாலக்ஷ்மியைக் குறித்து, மகான் ஆதி சங்கரரால் எழுதப்பட்ட பாடலே கனகதாரா ஸ்தோத்திரம். இது, லஷ்மி தேவியின் அருளால், ஏழ்மை விளைவிக்கும் கர்ம வினைகளை நீக்கி, செல்வத்தை ஈர்க்கும் சக்தி அளிக்க வல்லது. ஸ்ரீ சூக்தம் ஹோமம், உங்கள் துரதிர்ஷ்டங்களை விலக்கி, செல்வ நிலையை மேம்படுத்தும் ஆற்றல் வாய்ந்த ஹோம வழிபாடாகும்.
கனகதாரா பாராயணம் செய்து ஸ்ரீ சூக்த ஹோமம் நடத்துவது, லக்ஷ்மி தேவியின் ஆசிகளைப் பெற்றுத் தரும். இதனால், பணக் கஷ்டங்கள் தீரும். பொருளாதார நிலை மேம்படும். மேலும், ஆரோக்கியம், நிம்மதி, செல்வ வளம் கிடைக்கும்.
இந்த பாராயணமும், ஹோமமும், உலக மாதாவான லக்ஷ்மி தேவியை வழிபட்டு, அவள் அருள் பெறுவதற்காக நடத்தப்படுகின்றன. இதில் பங்கு கொள்வதன் மூலம், உங்கள் நல்லதிர்ஷ்டம் பலமடங்கு பெருகும். ஆரோக்கியம், செல்வம், வளமை போன்ற பல நன்மைகள் விளையும். பொருளாதார மேம்பாடுகளோடு கூட, ஆன்மிக முன்னேற்றமும் ஏற்படும்.
கனகதாரா ஸ்தோத்திர பாராயணம் மற்றும் ஸ்ரீ சூக்தம் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதை நிகழ்த்துவதனால், லக்ஷ்மி தேவியின் தெய்வீக அருள் கிடைக்கும். இதனால் உருவாகும் ஆற்றல் வாய்ந்த நேர்மறை சக்திகள், உங்களைச் சூழ்ந்துள்ள அனைத்து விதமான எதிர்மறைகளையும் நீக்கி, வாழ்க்கை லட்சியங்களை அடையத் துணை புரியும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
நஷ்டங்கள் தீரும், நிதி நிலை மேம்படும்
செல்வம் சேரும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் வரும்
உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறன் பிறக்கும்
தெய்வீக சக்தியின் அருள் எப்பொழுதும் துணை நிற்கும்