sign in Account
x
x
Search
x
உரகராஜ மகா மந்திர ஹோமம்

உரகராஜ மகா மந்திர ஹோமம்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்பது, சர்ப்பங்கள் அல்லது நாகங்கள் எனப்படும் பாம்புகளின் காரணமாக ஏற்படும் சாபம் அல்லது துன்பம் ஆகும். சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு, கேது கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7 அல்லது 8 ஆம் வீட்டில் அமைந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

நாக தோஷங்களைத் தீர்க்கும் ஹோமம்

அறிமுகம்

Grand Uragaraja Maha Mantra Homa

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்பது, சர்ப்பங்கள் அல்லது நாகங்கள் எனப்படும் பாம்புகளின் காரணமாக ஏற்படும் சாபம் அல்லது துன்பம் ஆகும். சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு, கேது கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7 அல்லது 8 ஆம் வீட்டில் அமைந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும், முற்பிறவிகளில் நாகங்களைக் கொன்றிருந்தாலும் அல்லது அவைகளுக்கு வேறு எந்த வகையில் துன்பம் விளைவித்திருந்தாலும் இது ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், இது கடும் துன்பத்தை விளைவிக்கக் கூடிய தோஷமாகக் கருதப்படுகிறது. இதன் எதிர்மறைத் தாக்கத்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம். கரு கலைந்து போவது, முதல் குழந்தை இறந்து போவது போன்ற சோகங்களும் ஏற்படலாம். இதனால், நாக தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பதில் பல தடைகள் ஏற்படலாம்.

உரகம் என்ற சொல்லுக்கு, நாகம் என்று பொருள். உரக ராஜர், நாகங்களின் அரசராக விளங்குகிறார். உரகராஜ மகாமந்திர ஹோமம் என்பது, இந்த நாகர்களின் தலைவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடாகும். இது, நாக தோஷத்தின் காரணமாக விளையும் தீமைகளை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.

உரகராஜ மகா மந்திர ஹோமத்தின் சிறப்பம்சங்

உரகராஜ மகா மந்திரம் பாராயணம் செய்து, உரகராஜ மகா மந்திர ஹோமம் நடத்துவது, நாக தோஷத்தின் விளைவுகளை நீக்கும் அல்லது குறைக்கும் சக்தி வாய்ந்தது. மேலும், ராகு கேது கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் விளையும் துன்பங்கள் போன்றவற்றையும் போக்க வல்லது. இதில் பங்கு கொண்டு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதனால், தீய சக்திகளிடமிருந்து நீங்கள் விடுபடலாம். நல்ல ஆற்றலுடன், முயற்சிகளில் வெற்றியும், வாழ்க்கையில் அமைதியும், வளமும் பெறலாம்.

பாரம்பரிய முறை ஹோமம்

உரகராஜ மகாமந்திர ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. உங்களது தேவைக்கேற்ப, சுப நிகழ்ச்சிகளின் பொழுதோ, சுப தினங்களிலோ இதை நடத்தலாம். உங்கள் ஜன்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற நாட்களிலும், நல்ல நேரங்களைத் தேர்ந்தெடுத்து, இதைச் செய்வது நல்லது. இதனால் சர்ப்ப தோஷ பாதிப்புகள் விலகி, பல நன்மைகள் உண்டாகும். நாக தோஷ துன்பங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும், செழிப்பும் நிலவும் வாய்ப்பு ஏற்படும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

உரகராஜ மகா மந்திர ஹோமத்தின் நற்பலன்கள்

  • குழந்தை பாக்கியத்தைத் தடுக்கும், மலட்டுத் தன்மை நீங்கும்

  • நம்மைச் சூழ்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும்

  • நம் அடுத்த தலைமுறையினருடைய தோஷ பாதிப்புகளையும் குறைக்கும்

  • குடும்ப வாழ்க்கையில் அமைதியையும், நிம்மதியையும் அளிக்கும்

காணொளிகள்

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept