தன்வந்திரி, ஆயுர் தேவதை, மிருத்யுஞ்ஜயர் என்ற மூவரும், நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றை அளிக்கக்கூடிய தெய்வங்கள் ஆவர். ஆரோக்கியம் அளிக்கும் ஹோமம் (பேக்கேஜ்) என்பது இந்த மூவரையும் கூட்டாக ஆராதித்து, அவர்களின் தெய்வீக அருள் பெற்று, நோய்களிலிருந்து உடனடி நிவாரணமும், நிரந்தரமான குணமும் பெற உதவும் ஹோம வழிபாடு ஆகும்.
இதன் மூலம், நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்திகள் தொலையும். நோய்கள் குணமடைந்து, ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும். மரண பயமும் நீங்கும்.
தெய்வீக மருத்துவர் எனப் போற்றப்படும் தத்வந்திரி, விஷ்ணு பகவானின் 12 ஆவது அவதாரமாகவும் கருதப்படுகிறார். அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் பெற்ற இவரது வழிபாடு, உடல்நலத்தை பெரிதும் மேம்படுத்தக் கூடியது.
ஆயுர் தேவதை என்பவர், பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு, ருத்ரன், தாக்ஷாயணி போன்ற பல தெய்வங்களின் இணைந்த வடிவமாகத் திகழ்கிறார். இவரை வழிபடுவது, ஆரோக்கிய வாழ்வுக்கும், நீண்ட ஆயுளுக்கும் வழி வகுக்கும்.
பக்தன் மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, ம்ருத்யு தேவனாகிய எமனையே வென்ற சிவபெருமான், மிருத்யுஞ்ஜயர், அதாவது மரணத்தை வென்றவர் என போற்றப்படுகிறார். இவரை ஆராதிப்பது, மரண பயத்தை நீக்கி, ஆயுளை அதிகரிக்கக்கூடியது.
இவர்கள் மூவரையும், ஹோமத்தின் வழியாக ஒருசேர வழிபடுவது, உடல்நலத்தைப் பலவகையிலும் முன்னேற்றும். தலையெழுத்தை நல்ல முறையில் மாற்றியமைக்கும்.
தன்வந்திரி, ஆயுர் தேவதை, மிருத்யுஞ்ஜயர் என்ற மூன்று தெய்வங்களின் சக்திகளையும் ஒருங்கே பெற்றுப் பயனடைய உதவும் இந்த கூட்டு ஹோம பேக்கேஜ், நோய்களற்ற நலவாழ்வு வாழத் துணை புரியக் கூடியதாகும். நோய்வாய்ப் பட்டிருப்பவர்களுக்கும், உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கும், இந்த வழிபாடு மிகச் சிறந்த பயன் தரக்கூடியது. எனவே இந்த வழிபாட்டில் பங்கு கொண்டு, நோய்கள், அகால மரணம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுங்கள். ஆரோக்கியமான இன்ப வாழ்க்கை வாழுங்கள்.
ஆரோக்கியம் அளிக்கும் பேக்கேஜ், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில், தன்வந்திரி, ஆயூர் தேவதை, மிருத்யுஞ்ஜயர் என்ற மூன்று தெய்வங்களையும் போற்றும் மந்திரங்கள், பக்தியுடன் ஓதப்படுகின்றன. ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களையும் கருத்தில் கொண்டு இது நடத்தப்படுவதால், அனைத்து வித மக்களுக்கும், இந்த வழிபாடு மிக நல்ல பலன்களைத் தருகிறது. தவிர, உங்களுக்கு வசதியான இடங்களிலும் இதை, நடத்தலாம். இதில் பங்கு கொண்டு தெய்வீக அருள் பெறுங்கள். நோய்களற்ற நீண்ட வாழ்க்கை வாழுங்கள். .
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
உடல்வலி, நோய்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
எதிர்மறை சக்திகள், பிரச்சினைகள் விலகி, நேர்மறை ஆற்றல்கள் பெருகும்
மரண பயம் நீங்கும்
நோய்களற்ற, ஆரோக்கியமான, நீண்ட வாழ்வு கிடைக்கும்
உற்சாகம் பெருகும்
வருங்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள இயலும்
தன்வந்திரி மந்திரம்
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வ ஆமய வினாஷாய த்ரைலோக்ய நாதாய தன்வந்தரி மகாவிஷ்ணவே நமஹ”
ஆயுர் தேவதை மந்திரம்
“ஓம் ஹாம் ஆயுர் தேவதாப்யோ நமஹ”
மிருத்யுஞ்ஜய மந்திரம்
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் ஊர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்க்ஷிய மா அம்ருதாத்”