தைத்ரிய உபநிஷத், பண்டைய கிருஷ்ண யஜுர் வேதத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இந்த உபநிஷத் வாக்கியங்களைக் கேட்டாலே போதும், நம் மனதில் பெரும் அமைதியும், சந்தோஷமும் தோன்றுவது உறுதி. விசேஷமான ஓசை நயம் கொண்ட இந்த ஸ்லோகங்கள், கேட்பவர் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவரை தர்ம வழியில் நடக்கத் தூண்டும்.
ஐக்யமத்ய சூக்தம், ஒற்றுமையை வலியுறுத்தும் புனிதமான ஸ்லோகமாகும். இது, மக்கள் ஒருவருடன் ஒருவர் நட்புடன் கூடி வாழ்ந்து, அமைதியும் ஆனந்தமும் பெற வழி வகுக்கிறது. தைத்ரிய உபநிஷத் பாராயணம் செய்து ஐக்யமத்ய சூக்தம் ஹோமம் நடத்துவது, நம்மிடையே அன்பை வளர்க்கும். சகோதரத்வத்தை மேம்படுத்தும்.
இந்த ஹோம வழிபாடு அமைதியையும், ஒற்றுமையையும் வளர்க்கும். மக்களிடையே, செல்வ வளம், ஆன்மிக முன்னேற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். இதில் பங்கு கொள்வதன் மூலம், நீங்கள் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் பெற முடியும். உறவினர்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மன நிறைவுடன், பயனுள்ள வாழ்க்கை வாழ முடியும்.
தைத்ரிய உபநிஷத் பாராயணம் மற்றும் ஐக்யமத்ய சூக்தம் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. உறவுப் பிரச்னைகளால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பாராயணமும் ஹோம வழிபாடும், வரப்பிரசாதமாக விளங்கும். இதனால், குடும்பத்துக்கு உள்ளேயும், உறவினர்களுக்கு இடையேயும் நிலவும் கருத்து வேறுபாடுகள் விலகி, நல்ல இணக்கம் ஏற்படும் சூழல் உருவாகும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
எதிர்மறை சக்திகள் விலகி, கர்ம வினைகள் அகலும் வாய்ப்பு ஏற்படும்
தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் விலகி, நெருக்கம் ஏற்படும்
தொழில் கூட்டாளிகளிடையே உறவு வலுப்படும்
நேர்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகள் வளரும்
கடமை உணர்ச்சி, கூட்டுறவு பெருகும்
வாழ்க்கையில் செல்வம், வளம், அமைதி நிறையும்
தன்னை உணரவும், ஆன்மிக வழியில் முன்னேறவும் வாய்ப்பு கிடைக்கும்
பொது நலனுக்காக உழைக்கும் எண்ணம் தோன்றும்