சரபேஸ்வர் அதாவது சரப ஈஸ்வரர், சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர். உக்ர வடிவாக விளங்கும் இவர், உலக உயிர்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ அம்சத்தைப் போற்றி வணங்கும் வழிபாடே, சரப ஹோமம் ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த சரபர் குறித்து செய்யப்படுவதால், இந்த ஹோமம், சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. இது அனைத்து விதமான தீமைகளையும் அழிக்க வல்லது. தீவினைகள், நோய்கள், அபிசார கர்மாக்கள் எனப்படும் பாபச் சுமைகள் என பலவற்றையும் போக்க வல்லது.
சரபர், பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து பாதுகாப்பை அளிப்பார். அவருக்காக நிகழ்த்தப்படும் சரப ஹோமம், மிகப் புராதனமான ஹோமம் ஆகும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீக சக்தி, நம் சுற்றுப்புறத்தைதத் தூய்மைப்படுத்தும். எதிர்மறை ஆற்றலை நீக்கும். இந்த ஹோமத்தை நிகழ்த்துவதனால், இறைவனின் நல்லாசி கிடைக்கும். இதனால், அன்றாட வாழ்வில் அல்லல்களை ஏற்படுத்தும் துரதிர்ஷ்டம், சாபம் போன்றவை விலகி, ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். ஆகவே, இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, பல நலன்களைப் பெற்று உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த ஹோமம், கடவுளோடு நம்மை ஐக்கியப்படுத்தக் கூடியது, எனவே தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது, தீய சக்திகளை எதிர் கொள்ளும் மன தைரியத்தை அளிக்கக் கூடியது. அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியையும் தர வல்லது. இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, சரப ஹோமத்தில் பங்கெடுத்து, இறைவனின் அருள் பெற்று, உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை அனுபவித்து மகிழுங்கள்.
சரப ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதனால் உங்களுக்கு தெய்வீக பாதுகாப்பும், வாழ்க்கையில் பலவித நன்மைகளும் விளையும். அதிலும், திங்கட்கிழமைகளில் வரும் பஞ்சமி மற்றும் த்ரயோதசி திதி நாட்களில், மேலும், குறிப்பாக, ராகு காலத்தில் இந்த ஹோமம் செய்வது, மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் விபூதி, உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.
எதிர்மறை சக்திகளின் தாக்கம் நீங்கும்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் காண இயலும்
குறிப்பாக, நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு பெரும் நன்மை தரும்
கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்
நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்க இயலும்
ஓம் ஹாம் சரபீஷாய நமஹ